வல்வெட்டித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள, குளிர்களி விற்பனை நிலையம், இனிப்பு கடை, காரம் சுண்டல் விற்பனை நிலையம் உட்பட 6 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக, வல்வெட்டித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால், உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, அழுக்கான நகங்களுடன் உணவினை பரிமாறியமை, அழுக்கான கரண்டிகளை பயன்படுத்தி குளிர்களியை நுகர்வோரிற்கு விநியோகம் செய்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நேற்றயதினம் எடுத்தக் கொள்ளப்பட்டது. விசாரணையின் பின் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 60000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.