வேடன் கேரளத்தின் திருச்சூரில் பிறந்தார். இவரது தாயார் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒரு ஈழத் தமிழர். இவரது தாய் தன் திருமணத்திற்கு முன்பு தமிழ்நாட்டின் உதகமண்டலத்துக்கு குடிபெயர்ந்து வந்திருந்தார். வேடனின் தந்தை முரளி கேரளத்தின் திருச்சூரில் பிறந்த மலையாளி. வேடன் திருச்சூர் தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஸ்வப்னபூமி என்ற இல்லத்தில் வளர்ந்தார்.
வேடன் என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, கேரளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய ராப்பிசைப் பாடகரும், பாடலாசிரியரும் ஆவார். 2020 ஆம் ஆண்டில் இவர் "வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்" என்ற தனது முதல் இசைக் காணொளி மூலம் முக்கியத்துவம் பெற்றார். இது ஒடுக்குமுறை குறித்த துணிச்சலான வருணனைக்காக பரவலாக கவனம் பெற்றது. வேடனின் இசை மலையாளம் மற்றும் தமிழ் ராப் இசையை இணைத்து, இவரது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தும் கேரளத்தின் சமூக-அரசியல் நிலப்பரப்பிலிருந்தும் உத்வேகம் பெற்றதாக உள்ளது. (விக்கிபீடியா)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.