ஆரோக்கியமாதா சொரூபம் தேவாலயத்தில் நாளை வைக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடி ஆரோக்கிய மாதா சொரூபம் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேவாலயத்தில் நாளை 05.02.17 அன்று வைக்கப்படவுள்ளது. மாலை 5 மணிக்கு பாதிரியாரின் ஜெபம் இடம்பெற்று ஆரோக்கிய மாதா சொரூபம் தற்பொழுது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து புதிய தேவாலயத்தில் வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பால் காச்சுதல் இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் இறுதியில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
1985 ஆம் ஆண்டு மாசி 28 ஆம் திகதி, வல்வை ரேவடிப் பகுதியில் உருவகம் பெற்ற குறித்த இந்த மாதா தேவாலயத்தை தமிழகத்தின் வேளாங்கண்ணி தேவாலய வடிவமைப்பையொத்த வடிவில் புணரமைக்கும் பணிகள் இதே பகுதியைச் சேர்ந்த திரு இரேசேந்திரம் செல்வசிகாமணி (துரைக் கண்ணன்) குடும்பத்தினால் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 28 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.