நடைபெற்ற நத்தார் பண்டிகை நிகழ்வுகளை, எமது இணையதளத்தில் வெளியிட்டமை பல வாசகர்களைச் சென்றடைந்துள்ளது. இந்த நிகழ்வு இதுவரை காட்சிப் படுத்தப் பட்டிருக்கவில்லை. இதன் விளைவாக வல்வை கிறிஸ்தவ தேவாலயம் பற்றி வாசகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அதனை கீழே இணைத்துள்ளோம். Thank you for the publishing our Valvettithurai church christmas celebration photos, but
தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில், வல்வை விக்னேஸ்வரா சனசமூகத்தினரினால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இன்று மாபெரும் பட்டப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டது. வல்வை உதயசூரியன் கடற்கரையில் சுமார் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பித்த இப் போட்டி 6.30 மணிவரை நீடித்தது.
தைப்பொங்கல் தினமான இன்று கனடா ஒன்டாரியோவில் கந்தசுவாமி ஆலயத்தில் அறிவகம் மற்றும் கனடா தமிழ்க் கல்லூரி ஆகியவை நடத்திய பொங்கல்விழாவில், கனடா வாழ் வல்வை மக்களும் பங்கு பற்றியிருந்தனர். இதில் சிறார்களால் தமிழர்களின் பண்பாட்டைச் சித்தரிக்கும் கலை நிகழ்வுகள் மிகச் சிறப்பாகக் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வல்வை வேவில் இளைஞர்களினால், இன்று 35 அடி மற்றும் 25 அடி உயரமான பட்டங்கள், வேவில் பிள்ளையார் மற்றும் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் ஏற்றப்பட்டது. இலங்கையில் இதுவரை ஏற்றப்பட்ட பட்டங்களில் இதுவே அதிக உயரமானது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
தைத்திருநாளான இன்று வல்வெட்டித்துறை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் பொங்கல் பானை வைத்து பொங்கல் கொண்டாடப்பட்டது. இவ்வாறு வல்வைச் சந்தியில் தமிழர்களின் தைத் திருநாள் தமிழர் பண்பாட்டு முறைப் படி கொண்டாடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பொங்கல் வந்தது... பொங்கல் வந்தது... பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிடப் பொங்கல் வந்தது, தை ஒன்றிலே மலர்ந்திடும் தைப்பொங்கல். தைத்திருநாள்... தரைமொழுகிக் கோலமிட்டு,
மாவிலை தோரணம் ஆங்கசைய கலம் தாங்கிட அடுப்பமைத்துப் புதுக்கலம் அதிலேற்றி
பகலவன் முகம் நோக்கிக் கலம் அமைய பகலவனும் கலம் நோக்க........கவிதை - திரு.வ.ஆ.அதிரூபசிங்கம்.
வதிரி பொம்மெஷ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை B விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மானிப்பாய் ரெட்றேன்சஷ் விளையாட்டுக் கழகம் மோதியது. இந்த ஆட்டம் வதிரி பொம்மெஷ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் தடகளம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்தாட்டம், எல்லே ஆகியவற்றிற்கான போட்டிகளில் சாதனைகள் படைத்ததுள்ளன. 2012ம் ஆண்டிற்கான சாதனைகளாக இவை பதியப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் (Bay of Bengal) உருவான குறைந்த காற்றழுத்த (Low pressure) தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ம் தேதி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் பலத்த காற்று நேற்று வீசியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் பாம்பன் ரயில் பாலத்தை கடப்பதற்காக காத்திருந்த இரண்டு சரக்குக் கப்பல்கள் தரைதட்டின.
CWN (Chithambara College Well wishers Network) இனால் முன்னெடுக்கப்பட்டு வந்த, வல்வை சிதம்பராக் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வுகூடம் வல்வை மாணவர்கள் பயன் பெறும் வகையில் அதன் சேவைகளை பொங்கல் தினத்திலிருந்து தொடங்குகின்றது
திரு.யோகசபாபதிப்பிள்ளை மற்றும் திரு.குலநாயகம் ஆகியோர், சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கூட்டம் தொடர்பான விளக்க அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். இவ் அறிக்கைகளில், வல்வை நகரசபைத் தலைவர் திரு ந.அனந்தராஜ் அவர்கள் எழுதிய 'கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக பழைய மாணவர் சங்கங்களைப் புனரமைக்குமாறு கோருதல்' கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.
சிதம்பராக் கல்லூரியில் புதிய காற்றோட்டமுள்ள இலகுவாக பராமரிக்கக் கூடிய புதிய பெண்கள் கழிப்பறைகள் கட்டுமானங்கள் CWN (Chithambara College Well wishers Network) இனால் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் NELSIP (North East Local Services Improvement Project - வடக்கு கிழக்கு உள்ளுராட்சி வளர்ச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபா செலவில் புதிய சந்தைக்கட்டிடத் தொகுதி ஒன்று வல்வை நகரசபையினால் அமைக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. புதிய சந்தைக் கட்டிடத் தொகுதியானது, தற்பொழுது இயங்கும் சந்தைக்கு சற்று அருகாமையில் அமையவுள்ளது.
யாழ் தீபகற்பத்தின் வல்வெட்டித்துறை உள்பட பல இடங்களில், நேற்று மாலையிலிருந்து காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில், தொடர்ந்தும் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, தென்மேல், மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை சமூகத்தின் வேண்டுதலைக் கருத்திற் கொண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் CWN (Chithambara College Well wishers Network) இனால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற் திட்டங்களில் ஒன்றான, பெண்கள் கழிப்பறைகள் நிர்மாணிக்கும் வேலைகள், பொங்கலுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வல்வை சிதம்பராக் கல்லூரியில் 31.12.2012 அன்று நடைபெறவிருந்த பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டமானது திடீரென மாசி மாதம் 10ம் (10.02.2013) திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை அறியத்தரும்படி பழைய மாணவர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள் .
வல்வெட்டித்துறை, மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் விதவிதமாக கண்ணைக்கவரும் விதத்தில் வானவெளியில் பட்டங்கள் காட்சி தருகின்றன. எதிர்வரும் பட்டப்போட்டியை முன்னிட்டு விதவிதமான பட்டங்களைத் தயாரிப்பதிலும், போட்டிக்குத் தயாராகுவதிலும் பட்டம் பறக்கவிடும் ரசிகர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் .
அமரர் புண்ணியமூர்த்தி அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை சைனீஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடைபெற்றுக்கொண்டிருந்த மென்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் பிற்பகல் 3.00மணிக்கு நடைபெற்றது.
வதிரி பொம்மெர்ஷ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை A விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கரணவாய் கருணாகரன் விளையாட்டுக் கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை A விளையாட்டுக் கழகம் 4 : 1 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால், வல்வெட்டித்துறை நகராட்சிக்குட்பட்ட பின்வரும் கோழியிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் என்பனவற்றை 15/01/2013 ஆம் திகதி தொடக்கம் 31/12/2013 ஆம் திகதி வரை குத்தகைக்கு நடாத்துவதற்கு பகிரங்க ஏலத்தில் வழங்கப்படவுள்ளதாக அறிவித்தல் விடப்பட்டிருக்கின்றது.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் வெளியிடப்பட்ட அறிவித்தலில், வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள மீன் சந்தைகளை குத்தகைக்கு எடுத்து நடாத்தும் மீனவசங்கங்கள், 18.01.2013 ஆம் திகதிக்குரிய மீள் கேள்வியில் பங்குபற்றி கேள்வி நடைமுறைகளுக்கு அமைய பணத்தை செலுத்தி 2013ஆம் ஆண்டிற்கான தமது குத்தகையை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.
சிதம்பராக் கல்லூரியில் மிகவும் நெருக்கமாகவும், நாளாந்த பராமரிப்பு அற்ற முறையில் மாணவருக்கு நோய் தரும் வண்ணம் கிடந்த கழிப்பறைகள் அகற்றப்பட்டு, புதிய காற்றோட்டமுள்ள இலகுவாக பராமரிக்கக் கூடிய கழிப்பறைகள் அமைக்கும் வேலைகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இரு பல்கலைக்கழகங்களில் முதன் முறையாக பொறியியல் பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளமை பற்றியும், அதன் அமைவிடங்கள் பற்றியும் உயர் கல்வி அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், கடந்த திங்கட் கிழமை முற்பகல் 10 மணிக்கு வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் திரு ந.அனந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
வட மாகாண கிரிக்கெட் பயிற்சியாளர் திரு.ரவீந்திர புஷ்பகுமார (Cricket Coach of Northern Province) அவர்கள், வல்வெட்டித்துறை ஊரிக்காடு நெட்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்திற்கு சில கிரிக்கெட் உபகரணங்களை இன்று காலை அன்பளிப்பாக வழங்கினார்.
வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரினால் வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் திரு.த.ரமேஸ்வரன் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இவர் க.பொ.த.(சா.த) , க.பொ.த.(உ.த) வகுப்புகளிற்கு வணிகக் கல்வி, மற்றும் க.பொ.த.(சா.த) வகுப்புகளிற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (Information and Communication Technology) ஆகிய பாடங்களை கற்பிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.
வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரினால் சிதம்பராக் கல்லூரிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் திரு.தி.சுபாகரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இவர் க.பொ.த.(சா.த), க.பொ.த.(உ.த) வகுப்புகளிற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (Information and Communication Technology) பாடத்தை தமிழ், ஆங்கில மொழிகளில் கற்பிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலின் தெற்கு வீதியில் 3 வது கலை இலக்கியப் பெருவிழா நடைபெற்றது. இவ் விழாவினைச் சிறப்பிக்க சிறப்பு விருந்தினராக வல்வெட்டித்துறையின் நாடகக் கலைஞர் திரு முத்துச்சாமி அவர்களும், பிரதம விருந்தினராக திரு சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டனர்.
வல்வெட்டித்துறையில் வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் வருடம்தோறும் நடாத்தப்பட்டுவரும் கலை நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் 4.00 மணியளவில்ஆரம்பமாகியது. வல்வைச் சந்தியில் இருந்து நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வீதியில் அமைந்திருக்கும் பிரதான அரங்கிற்கு, பிரதம விருந்தினர்கள் மேளதாள வாத்தியங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வல்வையில் செயற்பட்டுவரும், வல்வை ஒன்றியம் தம்மால் முன்னெடுக்கபட்டுவரும் 'பூரணம்' முதியோர் கொடுப்பனவுத் திட்டம், மற்றும் சில திட்டங்களை விளக்கி இன்று அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. சம்பந்தப்பட்ட அறிவித்தலையும், மற்றும் November மாத ஒன்று கூடலையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்.