Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (39) - தண்ணீர் தண்ணீர் தண்ணீர் - யாழின் நீர்த் தட்டுப்பாடு

பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2018 (சனிக்கிழமை)
‘தண்ணீர் தண்ணீர்’– இது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழகத் திரைப்படம். சிறு வயதில் பார்த்த, இன்றும் இன்னும் நினைவில் நிற்கும் கருத்தாழமிக்க ஒரு சிறந்த படம். இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழ் நாட்டின் ஒரு கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையை மிகவும் தத்துரூபமாக கண்கள் முன் நிறுத்தியிருந்தது. நடிகை சரிதா தண்ணீருக்காக குடத்துடன் நின்றது நினைவில் உள்ளது.
 
இன்னும் 20, 30 வருடங்கள் கழித்து ‘தண்ணீர் தண்ணீர்’ என்பதுடன் இன்னொமொரு ‘தண்ணீர்’ ஐச் சேர்ந்து, ‘தண்ணீர் தண்ணீர் தண்ணீர்’ என எமது வட பகுதியில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டி வரலாம் . அந்தளவுக்கு தண்ணீர் பிரச்சனை பாரியதொரு பிரச்சனையாக உருவெடுக்கலாம் - சரியான தீர்வுகள் எட்டப்படாவிட்டால்.
நீர் ஆறவே வற்றிய கிணறு - பத்திரிக்கை செய்தி 
நாற்பது வருடத்தில் இலங்கையின் பல மாவட்டங்களில் நீர்ப்பிரச்சனை ஏற்படவுள்ளது, இதில் முதலாவது இடத்தில் யாழ்ப்பாணம் இருக்கும் – ஒரு பேராசிரியரின் ஆய்வின் முடிவு.
30 குளங்களைக் காணவில்லை.
வடக்கில் பல இடங்களில் குடிநீருக்குத் தட்டுப்பாடு
வரலாறு காணாத வகையில் வரட்சி, குளங்களில் தண்ணீர் இல்லை  
குளங்கள் தூர்வாரப் படவேண்டும் 
* வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் விவசாயக் கிணறுகள் தயார் செய்யும் வேலைத்திட்டம் 
 
இவை போன்ற செய்திகள் பல, கடந்த சில நாட்களில் யாழ் தினசரிப் பத்திரிக்கைகள் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக பிரசுரிக்கப்பட்டவையாகும்.  
 
மழை வீழ்ச்சி பல காலங்களாக கிட்டத்தட்ட ஒரேயளவாக உள்ளது.
சனத்தொகை முன்னரை விட குறைவாகவுள்ளது 
நீரைப் பயன்படுத்துகின்ற Industry என்று எதுவும் இல்லை, 
வேறு இடங்களுக்கு இங்கிருந்து நீர் வழங்கப்படவுமில்லை 
 
அப்படியிருக்கையில் முன்னர் இல்லாத தண்ணீர் பிரச்சனை இப்பொழுது மட்டும் ஏன் தலை தூக்குகின்றது?
 
மரங்கள் அழிக்கப்பட்டமை, தொடர்ந்து அழிக்கப்படுபவை 
உவர் நீரேரிகளின் காப்பரணாக விளங்கிய கண்டால் காடுகள் அழிக்கப்பட்டமை 
நீர் தேங்கக் கூடிய குளங்கள் போன்றவை குறைவடைந்தமை
தேவைக்கு அதிகமான நீர் விவசாயத்தில் விரயாக்கப்படுகின்றமை
நீர் ஆவியாதல் அதிகரிப்பு 
பூமி வெப்பமடைதல் (Global warming).............எனப் பல பல காரணங்கள் 
 
அண்மையில் ஆர்டிக் துருவத்தில் இதுவரை வரலாற்றில் இல்லாதாவாறு கப்பல் ஒன்று பனிப்பாறைகள் உடைக்கும் கப்பலின் உதவியின்றி தனது பயணத்தை – அதுவும் குளிர் காலத்தில் மேற்கொடுள்ளது. காரணம் குளோபல் வார்மிங் காரணமாக பனிப்பாறைகள் உருகியுள்ளமையாகும். 
 
 
பொதுவாக வடக்கில் நீரைப் பொறுத்தவரை இரண்டு பிரச்சனைகள் உள்ளன.  
 
முதலாவது நிலத்தடி நீரின் தராதரம் 
 
இரண்டாவது சில இடங்களில் நீரே இல்லாத பிரச்சனை
 
தற்பொழுது இரண்டாவது பிரச்சனையானது சிலர் அலசுமளவுக்கு அளவுக்கு இடம் பிடித்துள்ளது. காரணம் வறட்சியாம்?
 
யாழ் குடாநாடு வருடம் தோறும் 1200 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியைப் பெறுகின்றது. 
 
வருட மழை வீழ்ச்சியை கடந்த சில வருடங்களாக அவதானித்து வருகின்றேன். சராசரியாக இதில் பெரிய வேறுபாடில்லை. அதாவது சராசரியாக 1200 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. 1000, 1100, 1200, 1300, 1400 என சில பொதுவாக ஏற்படக்கூடிய வேறுபாடுகள் தவிர. 
 
குறித்த இந்த  1200 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியில் மிகப் பெரும் பங்கானது, வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் அதாவது மாரி காலத்தின்  (North East Monsoon) போதே கிடைக்கின்றது. யாழின் நில மற்றும் நிர்வாகக் கட்டமைப்புக்களைப் பொறுத்தவரை இது ஒரு பிரதிகூலமான விடயமாகும். 
 
அதாவது 1200 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி நீரை முழுவதுமாக (குறைந்தது பகுதியாகவோ) இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ சேமிக்கக் கூடிய வகையில் ஏதுவான காரணிகள் யாழ் குடாநாட்டில் எதுவுமில்லை, சில சிறு அளவிலான குளங்களைத் தவிர. 
 
யாழ் நிலப்பரப்பானது மழை நீரை, நில மட்டத்துக்குக் கீழ், மிக நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடிய தன்மையற்றவை. யாழ் குடாநாடு கிட்டத்தட்ட நான்கு பக்கங்களாலும் கடலினால் சூழப்பட்டுள்ளது. இதனால் மழைநீரின் விரயமும் இயற்கையாகவே அதிகம். 
 
யாழ் குடாநாட்டு நிலப்பரப்பானது இலங்கையின் ஏனைய பாகங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிக்கலான நில அமைப்பினைக் கொண்டுள்ளது. அதாவது மிகப் பெரிய பரப்பளவினைக் கொண்ட உவர் நீர் ஏரிகளையும் (Lagoons) அதனையொட்டி சில இடங்களில் கடல் மட்டத்திற்குச் சம உயரம் அல்லது சற்றுக் கீழான உயரம் கொண்ட (Low lying lands) நில அமைப்புக்களையும் கொண்டுள்ளது. 
 
குடாநாட்டில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே செல்கின்றது. சிறுபராயத்தில் பார்த்த பல கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. ஒரு சில இடங்களில் அறவே இல்லை. மேலும் தோண்டினால் கடல்நீர் தான் கப்பிவழியாக  வரும் என்னும் நிலையில் உள்ளது. . 
 
ஊரில் சுந்தரப் பெருமாள் கோயிலில் தண்ணீர் அள்ள வருபவர்களும் அள்ளும் வீதமும் அதிகரித்து கொண்டு செல்வது ஒரு சிறு உதாரணம்.  
 
யாழில் தண்ணீர் பைப் லைன் வேறு போட்டுவருகின்றார்கள். ‘எங்கிருந்து தண்ணீர் வரப்போகின்றது’ எனக் கேட்டால் சரியான விடையைக் கூறுகின்றார்கள் இல்லை. 
 
ஒரேயொரு நீச்சல் தடாகத்துக்கு நீர் நிரப்பக் கூட பெரிய பாடாக இருக்கப்போகின்றது.   
 
இருக்கின்ற நிலத்தடி நீரும் குடிப்பதற்கு தரமானதாக இருக்காது என்பது என் எண்ணம். காரணம் யாழில் திண்மக் கழிவுகள் ஏதோ அள்ளப்பட்டு வெளிகளில் நகரசபைகளால் கொட்டப்பட்டாலும், திரவுக் கழிவுகளை அகற்றும் பொறிமுறைகள் எதுவும் இங்கு இன்னும் இல்லை. 
 
சமைத்த எண்ணை மிச்சம், எரிபொருள் கழிவு போன்ற திரவுக் கழிவு மீதங்கள் சாதரணமாக அவரவர் வீட்டு நிலங்களிலேயே வீசப்படுகின்றன. இதைவிட மனிதக் கழிவுகளும் வீடுகளிலே நிலத்தடியில் தேங்கவைக்கப்படுகின்றன. ஒருவர் வீட்டு குழி அடுத்தவர் வீட்டின் கிணற்றுப்பக்கம். அடுத்தவர் வீட்டின் குழி இன்னொருவர் வீட்டு கிணற்றுப் பக்கம்.  20, 30 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட குழிகளின் நிலை தற்போது எவ்வாறு உள்ளது என எவர் ஏனும் தோண்டிப் பார்ப்பதில்லை. 
 
உரம் மற்றும் கிருமி நாசினிப் பாவனை என்பது இலங்கையில் யாழ் மாவட்டத்திலேயே அதிகம் உள்ளதாம் நிலத்தடி நஞ்சூட்டுவதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன - ஆகவே தம்புள்ள காய்கறிகளையே நாங்கள் வாங்குகின்றோம் என்கின்றார்கள் யாழில் சிலர். 
 
ஊரில் எனது வீட்டு கிணற்று தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததா என்ற சந்தேகம். இந்த விடுமுறையில் எப்படியாவது நீரைச் சோதித்துப் பார்க்க வேண்டும் (Fresh water analysis) என முயற்சி எடுத்தேன். இறுதியாக பண்ணையில் தான் கொண்டு போய்ச் செய்ய வேண்டும் என்ற விடையைப் பெற சில வாரங்கள் எடுத்தது. இதுவரை தனி நபர் எவரும் இவ்வாறு யாழில் செய்தது போல் தெரியவில்லை. ‘ஏன் நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்’ என்கின்றார்கள்.. 
 
சிறியளவில் என்ன செய்யலாம் 
 
* மத்திய அரசும் மாகாண அரசும் செய்வதை விட பொதுமக்கள் நாங்கள்  தனியாகவும் சிறிய அளவில் பொதுவாகவும், நகரசபைகள் ஊடாகவும் சில வேலைத் திட்டங்களை முன்னெடுத்தால் நிலத்தடி நீரின் இருப்பை ஓரளவு கூட்டலாம் 
 
* தமிழகத்தில் ஜெயலலிதா அம்மையார் கொண்டு வந்திருந்த வீட்டுக்கு வீடு நீர் சேமிப்புத் திட்டம். அங்கு எடுபடவில்லை என்றாலும் யாழைப் பொறுத்தவரை அழகான திட்டம், ஏற்றதும் கூட. ஊரில் எனது வீட்டில் இதை வேறு வடிவில் செய்துள்ளேன். இயன்றவரை வீட்டு மழைநீர் வெளியில் போகா வண்ணம் அமைத்துள்ளேன். அயல்களில் சில வீடுகளில் நீர்ப் பிரச்சனை உண்டு. எங்கள் வீட்டில் நீர் மட்டம் அப்படியே உள்ளது.   
 
(பல இடங்களில் மழை காலத்தில் ஆட்களைக் காண்பது மண்வெட்டியுடன் தான். மழைத்தண்ணியை அடுத்தவர் வளவுக்குள் வெட்டித் திருப்புவதற்கு என்றே நிற்பார்கள்)
 
நிலத்தடி நீரை அதிகம் பற்றிப் பிடித்து வைத்திருப்பவை பாரிய மரங்கள் தான் - மரங்கள் நாட்டப்படவேண்டும். நாட்டிய மரங்கள் வளரும் வரை பராமரிக்கப் படவேண்டும். 
 
பொன்னாலையில் நாட்டப்பட்டுள்ள கண்டால் மரங்கள் 
 
கடந்த நான்கு வருடத்தில் மாகாணசபை பல்லாயிரம் மரங்களை நாட்டியுள்ளார்கள். 25 ஆம் திகதியுடன் விடைபெறப் போகின்றார்கள். தாங்கள் நாட்டிய மரங்களில் எத்தனை மரங்கள் தற்போது வளர்ந்து (உயிரோடு) உள்ளன எனக் கணக்கு எடுத்து வெளியேறுவார்களானால் மனச்சாட்சியுள்ளவர்கள் மீண்டும் சபைக்கு வரமாட்டார்கள். 
 
(அண்மையில் கூட தீருவிலில் ஒரு திட்டத்தின் கீழ் மரங்கள் நாட்டப்பட்டன. ஒரு சில நாட்களிலேயே அவற்றில் பலதும் காலி).   
 
 
* ஏரிகளை ஒட்டி அமைந்துள்ள சதுப்பு நிலங்களில்  கண்டல் மரங்கள் மீண்டும் நாட்டபடவேண்டும். சில இடங்களில் அண்மையில் நாட்டப்பட்டுள்ளன. இவற்றில் அதிகமானவை இலங்கை கடற்படையாலே நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
* குளங்கள் ஆழ அகலப் படுத்தப் படவேண்டும்.
 
* நீர் ஆவியாதல் தடுக்கப்படவேண்டும். இதற்குத்தான் அந்தக் காலங்களில் குளங்களில் அல்லி, தாமரை போன்றவற்றை வளர்த்தார்கள். இன்று குளங்களில் அவற்றைக் காண்பதே அரிது. 
 
* கடற்கரை ஓரங்களில், சதுப்பு நிலங்களில் நீரைப் பற்றிப் பிடிப்பதற்கும் நீர் ஆவியாதலை தடுக்க் என்றே அடம்பன் கொடி போன்ற மிகவும் பலம் வாய்ந்த கொடிகள் இயற்கையாகவே இருந்தன. இவையும் அறிவீனத்தால் பல மடங்கு யாழில் அழிக்கப்பட்டு விட்டன. 
ஆவியாதலைத் தடுக்கும் அடம்பன் கொடிகள் 
* வருடம் முழுதம் கடற்கரையில் சகல கழிவுகளையும் கொட்டுவோம். பின்னர் வருடத்தில் ஒரு நாள் அதிகாரிகள் மட்டத்திலிருந்து, பாடசாலை மாணவிகளையும் அழைத்து) கூட்டம் போட்டு ‘கடற்கரை சிரமதானம்’ என்று நாமம் இட்டு, குப்பை என்று கூறி இது போன்ற அடம்பன் கொடி செடிகளையும் வெட்டித் தள்ளி விடுகின்றோம். இவற்றால் தான் பிளாஸ்டிக்குகள் கடற்கரையில் வந்து தங்குகின்றன என்கின்றோம்?   
 
பெரியளவில் என்ன செய்யலாம் 
 
வடக்கு ஒரு உலர்வலய பிரதேசம் 
 
* வடக்கிற்கு கீழேயுள்ள நாட்டின் பல பகுதிகள் ஈர வலயம் ஆனவை. இங்கேயே பல ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆகவே இவற்றில் ஒன்ரைத் திருப்பி நீரைப் பெறலாம். கிளிநோச்சிக்காரர் இரணமடுவிலிருந்து யாழ்ப்பாணக்காரர்ருக்கு மிஞ்ச வைக்கக் கூடிய தண்ணீரைத் தர மாட்டினமாம், அவங்கள் விட்டால் நிச்சம் அது பெருந்தன்மை தான். 
 
* வட கீழ் பருவப் பெயர்சிக் காலத்திலயே பெரும்பான்மையான மழை வீழ்ச்சி கிடைப்பது பிரதி கூலமாக இருந்த போதிலும் இதையே அனுகூலமாக மாற்றமுயற்சிக்க வேண்டும்.  
 
தொண்டைமானாறு சுண்டிக்குளம் கடல் நீரேரியில் தொண்டைமானாறு பக்கமாக மழைநீரை சேகரிக்கும் பாரிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டிலே நீர் சேமிப்பு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப் பெரிய திட்டம் இது என்று கூடச் செல்லலாம். 
 
பிரதான வீதியை மூடி வழிந்தோடும் மழை நீர்-தொண்டைமானாறு வல்லை வீதி 
 
இதில் கூட சாமான்யனுக்கும் விளங்கும் குறைபாடுகள் உண்டு. 
 
பிரதானனமானது ஏரியை ஒட்டிச் செல்கின்ற பாதை. யாழ்ப்பாணத்துக்கான பிரதான பாதைகளில் ஒன்று இது. திட்டத்துக்கு ஏற்றவாறு பாதை உயர்த்தப்படவில்லை. ஆகவே கனத்த மழையின் போது வெறும் பாதையின் பாவனையை மட்டும் கருத்திற்கொண்டு பெருமளவு நீர் கடலில் வெளியேற்ற பட வேண்டியிருக்கும்.
 
 
 
* மழை நீரை தேக்கக் கூடிய செயற்கையான நீர்த் தாங்கிகள் (artificial water reservoir) அல்லது செயற்கையான நிலக் கீழ் நீர்த் தாங்கிகள் (artificial underground water reservoir) அமைக்கப்படவேண்டும்.
 
* மழைத் துளியே சங்கமிக்காத அரபு நாடுகளில் உள்ள Reverse Osmosis Plant இங்கு அமைக்க முயற்சிக்கின்றார்கள். அதாவது ‘கிடைக்கபெறும் மழை நீரை கடலில் கலக்கவிட்டு , அதே நீரை அதிக பொருட் செலவில் இயந்திரங்கள் கொண்டு பிரித்தெடுக்க வேண்டும்’ என்று நிற்கின்றார்கள். டெண்டர் மற்றும்  கொட்டேசனில் பல பங்கை சுருட்டுவதற்கு இது போன்றவை சிறந்தவை. ஆனாலும் ஒருகாலத்தில் Reverse Osmosis Plant ஒருபகுதி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அமைக்க வேண்டியே இருக்கும். 
 
வடக்கில் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. நிலம் ஈரம் அடையும், கிணறுகள் நிரம்பும். பொதுமக்கள், அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள்.... என அனைவரும் வறட்சியை மறந்து விடுவார்கள். வெள்ளம் வெள்ளம் என்று அனைவரும் கூச்சலிடுவார்கள். மழை நீர் கடலில் சென்றும், சதுப்பு நிலங்களிலும் விரயமாகிவிடும். 
 
பின்னர் சில மாதங்களில் மீண்டும் வரட்சி... பின்னர் மீண்டும் வெள்ளம். இவ்வாறு தான் ‘தண்ணீர் தண்ணீர் தண்ணீர் என கதை திருப்பித் திருப்பித் சென்று கொண்டிருக்கின்றது.  மழை வெள்ளத்தின் போது வெள்ளை நீரை கடலுக்கும் உவர் நீரேரிகளுக்குள்ளும் வெட்டி விடுபவர்களுக்கு வறட்சியின் போது எவ்வாறு நீரைக் கொண்டு வருவது என்று தெரியாமல் உள்ளார்கள்.
 
கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன் 
 
TP – 00 94 777 64 99 55 (Viber, Whats up)
Email - marinerathava@yahoo.com
Face book – athiroobasingam.athavan

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
RAJKUMAR PERIYATHAMBY (canada) Posted Date: October 07, 2018 at 06:32 
அதிசிறப்பு மிக மிக முக்கியமான பதிவு .பனைமரம் நிலத்தடி நீரைபாதுகாக்கும் மரம் என்று நான் படித்திருக்கின்றேன் யாழ்பாணத்தில் தண்ணீர் பிரசனைவரும் என்று முன்னரே தெரிந்துதான் எமது முன்னோர்கள் பனைமரத்தை யாழ்பாணத்தில் அதிகமாக நட்டுவைதிருக்கின்றார்கள் அதுமட்டுமல்ல பனைமரத்துக்கு புயலின் வேகத்தை குறைக்கும் தன்மையுள்ளது என்றும் படித்திருக்கின்றேன் மரங்களின் அருமைதெரியாமல் மதில் கட்டுவதற்கும் வீடுகட்டுவதற்கும் எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் வெட்டி வீழ்த்துகின்றனர் .மழைகாலத்தில் பெரும்பாலான மழைதண்ணீர் வீணாக கடலிலேதான் கலக்கின்றது மழைத்தண்ணீரை சேமிக்கின்ற திடங்களை செயல்படுத்துவதோடு மக்களிடையே தண்ணீர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .வீதிகளை அகலபடுத்துவதோ வீடுகளை கட்டிக்கொடுப்பதோ அத்தியாவசியம் இல்லை வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிப்பதே அத்தியாவசியம் .


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
ஆதவன் பக்கம் (22 ) – 'பழனியப்பா' எனும் மகத்தான மனிதர்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2020 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (38) - விவிரி ஜங்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/09/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (37) - சிறந்த உற்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/09/2018 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதவன் பக்கம் (36) - கழகங்கள் கலைக்கப்பட வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (35) - ஒரு குடும்பத்தின் வாழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (34) – அன்னதானத்துக்குப் பட்டபாடும், அன்னதானம் படும்பாடும்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/09/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (33) – இவர்கள்தான் கெளரவிக்கப்படவேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (32) - Hats off ஜெயா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (31) – வல்வையில் துறைமுகத்துக்கான சாத்தியங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (30) – யாழிலும் யூனிவேர்சல் பழங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (29) – ஊரில் பணப்புழக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (28) - அக்கௌன்டன்ட் குமாராசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (27) – உண்மைச் சம்பவம் - ஐயாவும், ஆஞ்சநேயர் சாமியாரும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (26) – கண்டன் ஆச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (25) – யாழ்ப்பாணத்தாரின் ஒழுங்கைகளும் சுவர்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (24) – கப்பல் வாங்கிய நம்மவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (23 ) – யாழ்ப்பாணக் குப்பைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (21) – சுமந்திரனுக்கு வல்வையில் மாலை, 'Shame' மா?
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (20) – கஸ்புஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (19) – மதுராவும் வல்வையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (18) – இந்திரவிழாவில் நான் கண்ட 17 குறைபாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (17) – பாணாக்கம், மோர், தயிர்ச்சோறு, சர்பத்..........
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (16) – ஒரு முதுசத்தின் மறைவு (காணொளி இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (15) – கப்பல் மாப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (14 ) – வல்வை வரைபடத்தில் முதலாவதாக ரேவடிப் பூங்கா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (13) – நான் ஒரு மரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (12 ) – இங்கு ஆங்கிலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (11) – கொட்டப்பட்ட இ வேஸ்ற்றுக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (10) – இசை நிகழ்ச்சியால் வல்வையில் மழுங்கடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2018 (வெள்ளிக்கிழமை)
ஆதவன் பக்கம் (9 ) – பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (8) – தடுமாறும் தமிழர் தமிழ் பெயர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (7) – வேதா ரீச்சரும் மதுரா அக்காவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (6) உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள், 3 வருடங்கள் முன்பு நான் விரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (5 ) – மயிலிட்டி என்னும் சோகம், நேரடிப்பாதை வல்வைக்கு வளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (4 ) – நகரபிதாவிற்கு………………….பொது மக்கள் சார்பில் 101 கோரிக்கைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (3) - M.K.சிவாஜிலிங்கம் - நான் அறிந்த ஊரின் சேவகன் -
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (2) – அரிப்பும், அழிப்பும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (1) – ஐயா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2018 (வெள்ளிக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA தை மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகசுந்தரம் அழகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai