Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (12 ) – இங்கு ஆங்கிலம்

பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2018 (சனிக்கிழமை)
சாட்டை திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் மாணாக்கர்களுக்கு “ஆங்கிலத்தின் மேலாண்மையால் ஏராளமான தனித்துவமான தொன்மையான சிறு மொழிகள் அழிந்துவிட்டன, பல மொழிகள் அழிந்து வருகின்றன, எதிர்காலத்திலும் பல மொழிகள் அழிந்துவிடும். ஆனாலும் நாம் இன்றைய கால ஓட்டத்துடன் இணைந்து செல்ல வேண்டுமென்றால் ஆங்கிலம் கற்க வேண்டியது மிக அவசியம்” என சமுத்திரகனி கூறுகின்றார்.
 
உலகில் எதிர்காலத்தில் அழியும் என எதிர்பார்க்கப்படும் மொழிகளின் தரவுகள் பற்றி சில வருடங்கள் முன்பு படித்ததும் ஞாபகம். 
 
தமிழை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. அதற்காக தற்காலத்தில் தமிழை மாத்திரம் வைத்து பிற இடங்களில் பிற நாடுகளில் வேலை வாய்ப்பு விடயங்களில் சமாளிக்க முடியாது  என்கின்ற நிலை, குறிப்பாக இளைஞர்களுக்கு.
 
வல்வெட்டித்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஆங்கிலத்தின் தரம் எவ்வாறுள்ளது. இங்கு நான் ஆங்கிலத்தின் தரம் என்று வரையறுப்பது  சாதாரண தரம், உயர்தரம் மற்றும் இங்கு பல்கலைக் கழகத்தில் படிப்பை மேற்கொண்டுள்ள, நிறைவு செய்துள்ள பட்டதாரிகள், பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கிலக் கற்கைநெறி போன்றவற்றையே குறிப்பிடுகின்றேன்.  
 
ஆரம்பப்பள்ளிகளில்
 
தலைநகர் கொழும்பில் உள்ள ஆரம்பப்பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் இங்கு ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கில கற்கைநெறியின் தரம் என்பது மிகவும் வலுக்குன்றிய ஒரு நிலையில்தான் உள்ளது. மொழி கற்றல் என்பது சிறு பராயத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவேண்டியவொன்று. கற்கும் 4, 5 வயதுக் குழந்தைகளுக்கு என்ன கற்கவேண்டும், எப்படிக் கற்கவேண்டும் போன்றன பற்றி எதுவும் தெரியாது. பெற்றோரும், ஆசிரியர்களும், முன்பள்ளிகளை நடாத்துபவர்களுமே இதனை மேற்கொள்ள வேண்டும்.
 
கால்கோள் விழா, விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா, வாணி விழா,  பிரியாவிடை விழா என்று சிறப்பாகச் செய்கின்றார்கள். வருடங்கள் மாறி நிகழ்வுகள் இது போன்ற நிகழ்வுகளுடன் சுழன்று  முடிகின்றது, மீண்டும் ஆரம்பமாகித் தொடர்கின்றது. ஆங்கிலத்துக்கான சரியான இடத்தினை இங்குள்ள எந்தவொரு முன்பள்ளிகளும் இதுவரை கொடுக்கவில்லை. 
 
கொழும்பிலிருந்து ஆங்கிலத்தில் புலமைபெற்ற, கற்பிப்பதில் தகமைபெற்ற ஓரிரு ஆசிரியர்களைக் இங்கு அழைத்து வந்து, சில வருடங்கள் நிரந்தரமாகத் தங்கவைத்து சிறார்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்று ஒரு சிலரிடம் கூறிக்கொண்டு வருகின்றேன்.
 
‘ஏன் ஊரிலும் ஆங்கிலத்தில் தகமைபெற்ற சிலர் உள்ளார்கள்தானே’ என்ற வாதம் வரலாம். புலமை வேறு, கற்பித்தல் என்பது வேறு. அதுவும் குழந்தைகளுக்கு.
ஆச்சரியப் படவைக்கும் இளையமகள்  
கடந்த மூன்று வருடங்கள் முன்பு தலைநகரில் எமது கப்பல் நிறுவன ஒன்றுகூடல், குடும்பம் சகிதமாக. பல நிகழ்வுகளை திடீர் என ஒழுங்குபடுத்தியிருந்தோம். எனது இளையமகள் (அப்போது நான்கு வயது) தானும் பாட்டு (Poem) ஒன்று பாடவேண்டும் என அடம்பிடித்தாள். அவளின் ஆசை பாட்டுப்பாட வேண்டும் என்பதல்ல, மாறாக மைக்கைப் பிடித்துப் பாடவேண்டும், தனது குரல் மைக்கில் ஒலிக்க வேண்டும் என்பதே.
 
ஒரு சந்தர்ப்பம் கொடுத்தோம். பாட்டைத் தொடங்கினாள். நான்கு வரிகள் முடிய இதோ முடிக்கப்போகின்றாள் என எல்லோரும் நினைத்தோம், தொடர்ந்தாள், தொடர்ந்து கொண்டேயிருந்தாள். கிட்டத்தட்ட நான்கு ஐந்து நிமிடங்கள் சென்றிக்கும் அவளின் பாட்டு நிறைவடைய. பலத்த கரகோஷம். 
 
இன்று நினைத்தாலும் எனக்கு வியப்பு. நானோ சரி மனைவியோ சரி, குறித்த ஆங்கிலக் கவிதையை ஒருபோது கற்பித்ததே கிடையாது என்பதே அதற்க்குக் காரணம். அன்றுதான் நாங்கள் கூட முதன் முதலில் மகள் அந்தப்பட்டைப் பாடியதை கேட்டோம். 
 
நான் இங்கு கூறவரும் விடயம். மகள் அதைக் கற்றுக்கொண்ட இடம் மற்றும் கற்பித்தவர்கள். குறித்த பாட்டை மகள் வெறும் வசனம் வாசிப்பது போல் வாசிக்கவில்லை. மாறாக ஏற்ற இறக்கத்துடன், தேவையான அசைவுகளுடன் அறுத்துறுத்து பாடியிருந்தாள்.
 
மகளுக்குக் கற்பித்த ஆசிரியைகள் மூவரையும் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
 
கொழும்பிலுள்ள ஆங்கில முன்பள்ளி ஆசிரியைகளை அழைத்தால் அதிகம் பணம் செலவாகும் என்பார்கள். நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன். ஆனால் இங்கு யாழில் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியளவில் தான் கொழும்பில் முன்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியைகள் சராசரியாக சம்பளமாகப் பெறுகின்றார்கள்.
 
அங்கிருந்து அழைத்தால் சம்பளம் சற்றுக்கூடக் கொடுக்கவேண்டும், தங்குவதற்கான செலவுகளையும் செய்து கொடுக்கவேண்டும்.
 
வருடம்தோறும் விளையாட்டுப் போட்டிகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் செலவிடும் பணத்தைச் சுருக்கி (ஓரிரு வருடங்கள்) அதிலிருந்து வரும் பணத்தைப் பெற்றாலே, சில வருடங்களுக்கு குறித்த கற்பித்தலை இங்கு முன் நகர்த்தலாம். அத்துடன் சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடமிருந்தும் கண்டிப்பாக பணம் அறவிடப்படவேண்டும். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் வலி தெரிய வேண்டும். (போரினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் நீங்கலாக) 
 
பாடசாலை மட்டத்தில் 
 
இங்கு யாழில் பரவலாக பாடசாலை மட்டத்தில் ஆங்கிலக் கற்பித்தலின் தரம் சராசரிக்குக் குறைவே என்பது பலரின் கருத்து. வெளிவரும் பரீட்சை முடிவுகளும் இதற்குச் சான்றுபோல் தான் அமைந்துவருகின்றன.
 
இது எங்களுக்கு அப்பாற்பட்ட விடயம், ஆகவே அதிகம் கருத்துச் சொல்வதில் அர்த்தம் இல்லை. 
 
தனியார் கல்வி நிறுவனங்களிலும் ஆங்கிலம் அந்தளவுக்குத் திறம் என்று கூறமுடியாது. சராசரிக்கு மேல் தனியார் கல்வி நிலையங்களில் ஆங்கிலக் கற்கைநெறி பயிற்றப்படுகின்றது என்றால், சா/த மற்றும் உ/த பரீட்சை முடிவுகள் இதற்குச் சான்றுபகிர வேண்டும்.
 
ஆனாலும் சில தனியார் ஆசிரியர்கள் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் சிறப்பாக பிரத்தியேக ஆங்கில வகுப்புக்களை நடாத்தி வருகின்றனர்.
 
வழமைபோல் பெற்றோர்களும் அக்கறை காட்ட வேண்டும் என்று நான் எழுத முனையவில்லை. ஆசிரியர்களின் வாதம் இதுவாகத்தான் இருக்கும். பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பார்கள். இன்று ஆங்கிலம் என்பது வெறும் A, B, C, D, E யையும் Apple, Ball மற்றும் Twinkle Twinkle little star போன்றவற்றையும் வீட்டில் சொல்லிக் கொடுப்பதால் முடிவதில்லை. 
 
மொழி - முக்கியமாக பிறமொழி என்பது சிறுவயதில் கற்க வேண்டிய விடயம். சுப்புரமணியசுவாமி வயது முதிர்ந்த பின்னர் சீனமொழி கற்றுக்கொண்டது போல் (?) சராசரி மக்களால் அவ்வாறு கற்பது என்பது இலகுவான ஒன்றல்ல. 
 
பூங்காவில் ஆங்கிலம் 
 
சில வருடங்கள் முன்பு என்னுடன் சீன இளநிலை அதிகாரி ஒருவர் பணிபுரிந்தார். பொதுவாக சீனர்கள் ஆங்கிலத்தில் கடுமையாக திணறுவார்கள். காரணம் சீன கம்யூனிசம் சிறுவயதில் ஆங்கிலம் கற்பதை விரும்புவதில்லை. சீனர்களின் நாக்கும் ஆங்கில சொற்களை உச்சரிக்க அதிகம் இடம் குடுப்பதில்லை. (பெரும்பாலானோரால் R ஐ சரியாக உச்சரிக்கவே முடியாது).
 
குறித்த சீன இளநிலை அதிகாரி ஆங்கிலத்தில் மிகவும் தேறியிருந்தார். ‘எப்படி உன்னால் முடிந்தது’ என்று கேட்டேன். 
 
முதலில் ஒரு அமெரிக்கப் பெண்மணியிடம் ஆங்கிலம் கற்று, பின்னர் ஒரு பூங்காவில் தினமும் கதைத்துப் பயிற்சி செய்ததாகவும் கூறினார். அதாவது நகரின் மத்தியில் அமைந்திருந்த பூங்கா ஒன்றின் ஒரு பகுதியில் ஆங்கிலம் கதைக்க விரும்புவர்கள் ஒன்று கூடி ஆங்கிலத்தில் கதைப்பதாகவும் கூறினார் 
 
நாமும் ஏன் வல்வையில் இது போன்று ஒன்றை செய்யமுடியாது? நகரின் மத்தியில் பலர் கூடும் ரேவடிப் பூங்கா. இங்கு பெரியவர்களில் குறிப்பிடக்கூடியோர் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள். ஆங்கிலத்தில் கதைப்பவர்களுக்கு கற்பிப்பவர்களுக்கு இருக்கவேண்டிய தகமை ஒன்றும் தேவை இல்லை. ஆகவே ரேவடிப் பூங்காவின் ஒரு பகுதியில் யாராவது இந்த புதிய முயற்சியை ஆரம்பித்தால் வெற்றிபெற வாய்ப்புள்ளது. பெண்களால் முன்னெடுக்கப்படும் யோகா பயிற்சி தற்பொழுது சிறப்பாக இயங்கிவருவது இது போன்ற முயற்சிகளுக்கு ஒரு சிறந்த உதாரணம். 
 
இதைப்பார்த்து யாரும் பிரச்சனையும் ஏற்படுத்தமாட்டார்கள், சிரிக்கவும் மாட்டார்கள். ஏனெனில் எல்லோரும் ஒருநாள் வவுனியாவை தாண்டவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். 
 
இது ஆரம்பித்து தொடர்ந்து நிகழவேண்டும். இப்படி ஒன்று நிகழுமானால் புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்கள், இங்கு கூடிக் கதைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பார்கள்.  
 
இளைஞர்கள் 
 
பலர் தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலம் படிக்கத் தவறிவிட்டார்கள். ஆங்கிலம் படித்தேயாக வேண்டும். 20, 25 வருடங்கள் முன்பு விழாக்களுக்கு விருந்தினர்களாக தமிழர்கள் மட்டும்தான் அழைக்கப்பட்டார்கள். தற்பொழுது நிதி அமைச்சரையும் அழைக்கின்றோம், விளையாட்டுத்துறை அமைச்சரையும் அழைக்கின்றோம். எப்படி இவர்களுடன் தொடர்ப்பாடப் போகின்றோம். இதற்கும் தரகரா?
 
பல படித்த நமது இளைஞர்கள் இன்று வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்வதில் சிக்கலாகவுள்ளது மொழி பிரச்சனை (சிங்களமொழி உட்பட). 
 
6, 7 வருடங்கள் முன்பு ஊரில் கடுமையாக இதைப்பற்றிப் பலரிடம் கதைத்தேன். பந்து ஒன்றை எடுத்து விரல் நுனியில் வைப்பது போல் இருந்தது. நண்பன் ஒருவன் ‘உனக்கு ஏன் வீங்கின வேலை’ என்றான். ஆனாலும் நானும் விட்டுவிடுவதாக இல்லை. 
 
மும்மொழிகள் 
 
திவாகரன் – எனக்கு கணித கற்ப்பித்தவர்களில் ஒருவர். தலைநகரில் 2000 – 2010 இல் தொடர் மாடிக்கட்டட நிர்மாணங்களில் தனக்கென ஒரு இடம்பிடித்தவர். ஒருமுறை கதைக்கும் பொழுது கூறினார், “ஆதவா பிள்ளைகளுக்கு மூன்று மொழிகளையும் நன்றாகப் படிப்பி அதுவே வேலை வாங்கிக் கொடுக்கும்” என்று. 
 
பலதடவைகள் இதை நான் நினைப்பதுண்டு, பலருக்கு இதை நானும் கூறியதுமுண்டு. 
 
நாட்டில் இஸ்லாமியர்கள் வேகமாக முன்னேறுவதற்கு காரணங்களில் முதன்மையானது இது – மூன்று மொழிகளையும் அவர்கள் தெரிந்து வைத்திருப்பது.
 
வல்வையில் இடம்பெறும் அங்கில கற்கைநெறிகள் 
 
இலவச ஆங்கில வகுப்புக்கள் நாடாத்தினார்கள். பாராட்டப்படவேண்டிய முயற்சி.
 
சற்று நிம்மதி தரும் விடயம் வல்வை மாலுமிகள் சங்க அனுசரணையில் நடாத்தப்பட்டுவரும் ஆங்கில கற்கைநெறி வகுப்புக்கள். கற்பவர்களில் 80 சதவீதமானோர் பெண்கள் என்பது ஆச்சரியம் – ஆச்சரியமல்ல என இரண்டுமான விடயங்கள்.
 
கடந்தமுறை விடுமுறையில் நின்றபோது, சந்தி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றுவரும் மேற்குறித்த வகுப்பை பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. 2 மணித்தியாலங்கள் நின்று அவதானித்தேன். 
 
உச்சிக்குக் கொண்டு செல்கின்றார்கள் என்று கூறாவிட்டாலும்  நன்றாகவே வகுப்பைச் கொண்டு செல்கின்றார்கள் என்று கூறலாம். அனைத்து மாணவர்களையும் கதைக்க வைக்கின்றார்கள். சிறந்த ஆங்கிலப் பின்னணியற்ற சில மாணவிகள் ஓரளவு சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினார்கள்.  
 
வல்வையில் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்விசார் முக்கிய நிகழ்வுகளில் முதன்மையானதொன்று இந்த ஆங்கில வகுப்பு.    
 
கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன் 
TP – 00 94 777 64 99 55 (Viber, Whats up)
Face book – athiroobasingam.athavan   

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Vinayagam (Germany) Posted Date: March 28, 2018 at 17:20 
மிக சரியான பதிவு, இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தவும். நன்றி தம்பி ஆதவா (ஆங்கிலம் மட்டும் இல்லை சிங்களமும் தான்)

Thurailingam (UK) Posted Date: March 24, 2018 at 12:30 
ஆதவன், உங்கள் ஆங்கிலம் பற்றிய கட்டுரையில் பல அரிய விடயங்களைப் பகிர்ந்தீர்கள். மிகவும் அருமையான கட்டுரை. யோகா பயில்வது போல ஆங்கிலம் பெரியோர்களால் பயிற்றப்படலாம் என்ற யோசனை திறம்! பெரியோர் கல்வி (Adult education, Lifelong learning) எங்கள் ஊருக்கு அவசியம்.

மிகவும் வருத்தமான ஊர்நிலமை என்னவென்றால் ஆங்கிலம் படித்தால் தமிழைப் பரப்பலாம் என்பதற்குப் பதிலாக தமிழை மறந்து விடுவோம் என்று எண்ணுவதும் (பயப்படுவதும்), மற்றவர்களிடம் இல்லாத, ஊர் மக்களிடம் உள்ள துணிச்சலையும் அறிவையும் வெளி நாட்டவர்களிடம் காட்டினால் அவர்களை (வெளிநாட்டவர்களை) விட மேலான நிலைக்கு வரலாம் என்பதை அறியாது இருப்பதும்தான்.

RAJKUMAR PERIYATHAMBY (Canada) Posted Date: March 24, 2018 at 08:30 
ஆங்கிலம் தவிர்க்கமுடியாத ஒரு மொழி என்பது உண்மைதான் எந்த மொழியையும் பிள்ளைகளுக்கு கற்றுகொடுபோம். மொழிஎன்பது அறிவல்ல நாம் வாழ்வதற்கு வேறு இடங்களுக்கு வேறுநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு எமக்கு உதவும் ஒரு கருவிதான் என்பதை பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பெரும்பாலான பெற்றோர் ஆங்கிலம் என்பது அறிவுபோலவும் பிள்ளைகள் ஆங்கிலம் பேசினால் உயர்வுபோலவும் நினைப்பது மிகவும் அபத்தமானது {ஆபத்தானது}.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
ஆதவன் பக்கம் (11) – கொட்டப்பட்ட இ வேஸ்ற்றுக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (10) – இசை நிகழ்ச்சியால் வல்வையில் மழுங்கடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2018 (வெள்ளிக்கிழமை)
ஆதவன் பக்கம் (9 ) – பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (8) – தடுமாறும் தமிழர் தமிழ் பெயர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (7) – வேதா ரீச்சரும் மதுரா அக்காவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (6) உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள், 3 வருடங்கள் முன்பு நான் விரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (5 ) – மயிலிட்டி என்னும் சோகம், நேரடிப்பாதை வல்வைக்கு வளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (4 ) – நகரபிதாவிற்கு………………….பொது மக்கள் சார்பில் 101 கோரிக்கைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (3) - M.K.சிவாஜிலிங்கம் - நான் அறிந்த ஊரின் சேவகன் -
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (2) – அரிப்பும், அழிப்பும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (1) – ஐயா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2018 (வெள்ளிக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA தை மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகசுந்தரம் அழகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - கமலலோசனா பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
தேரேறி வருகின்றாள் எங்கள் தேசமன்னன் வளவுக்காரி.
பிரசுரிக்கபட்ட திகதி: 22/04/2024 (திங்கட்கிழமை)
இன்றைய நாளில் - இலங்கையின் மிகப்பெரிய செல்வச்சந்நிதி தேர் எரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2024 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வேட்டைத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/04/2024 (செவ்வாய்க்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai