இலங்கையின் 70 ஆவது வரவுச் செலவு திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 355 வது பிரிவில் வல்வெட்டித்துறையில் கின்னஸ் புகழ் வீரர் குமார் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகத்தினை நிர்மாணிப்பதற்கு 25 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டிதுறையின் தீருவில் பகுதியில் அமைந்துள்ள, தற்பொழுது வல்வை நகரசபையின் கீழுள்ள, பரந்த நீச்சல் வெளிப்பரப்பில், சர்வதேச தரத்திற்கு ஈடான நீச்சல் தடாகம் அமைவது சம்பந்தமான பல செய்திகளை நாம் (மட்டும்) எமது இணையதளமான வல்வெட்டித்துறை.ஓஆர்ஜி முன்னர் பிரசுரித்திருந்தோம்.
யாழில் அமையவுள்ள மிகவும் பொருட்செலவிலானதும், மிக முக்கியமானதுமான இந்த செய்தி யாழின் ஊடகங்களில் கூட பெரிதாக கண்டுகொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வல்வையின்பால் அக்கறை கொண்டுள்ளதைப்போல் செயற்படும் ஒரு சில ‘நலன்விரும்பிகள்’ கூட, நாம் முன்னர் இது குறித்த வெளியிட்ட செய்திகள் சம்பந்தமாக எள்ளிநாகையாடியிருந்ததுடன், நீச்சல் தடாகம் அமைவது தொடர்பான எதிர்மறையான செய்திகளை பரப்பிவந்திருந்ததும் சுட்டிக்காட்டத்தக்கது.
நீச்சல் தடாகம் தொடர்பாக நாம் முன்னர் வெளியிட்டிருந்த பிரதான செய்திகள்
1. ஆழிக்குமரன் ஆனந்தன் சார்பாக யாழில் நீச்சல் தடாகம் அமைக்க முடிவு, தீருவிலில் அமைக்க சிவாஜிலிங்கம் வேண்டுகோள்:
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஜக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: November 13, 2016 at 00:05
வல்வை மக்களுக்கு மட்டும் மாத்திரம் என்றல்ல எமது ஒட்டுமொத்த தமிழினத்திற்குமே பெருமைதேடித்தந்தவர் எமது வீரம்விளைந்த வல்வை மண்ணின் மைந்தன் ஆழிக்குமரன் ஆனந்தன் அண்ணா அவர்கள்.
.
எமது சாதனைத்தவப்புதல்வனை கௌரவிக்கும் வகையில் அவரது பெயரில் நாம் பிறந்த மண்ணில் நீச்சல்தடாகம் ஒன்று அமையவிருக்கிறது என்ற இனிப்பான செய்தியை வெளியிட்டுள்ளீர்கள்.
மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது.
.
கின்னஸ் புத்தகத்திலுள்ள பல சாதனைவீரர்களின் சாதனைகளை முறியடித்து வெற்றிவாகைசூடி எமது தமிழ்த்தாயின் மணிமகுடத்தில் பல வைரங்களை பதித்த எமது வைரநெஞ்சனைப்பற்றிய செய்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மற்றய ஊடகங்கள் வெளியிடத்தவறியது மிகவும் வேதனையை தருகிறது.
.
இது அவர்களின் நடுநிலைமையே சந்தேகப்படவைக்கிறது.
.
எதுஎப்படியிருந்தாலும் நீங்கள்ஒருவராவது மிகவும் நடுநிலைமையோடும் சமூக அக்கறையோடும் செயல்ப்பட்டு எமது மண்ணின் மைந்தனுக்கு பெருமைசேர்க்கவுள்ள இந்த நீச்சல்தடாகம் பற்றிய செய்திகளை பல தடவைகள் எமக்கு அறியத்தந்திருக்கிறீர்கள்.
இதை நினைக்கும்போது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.
உங்களது இந்த அளப்பரிய சேவைக்கு மிக்கநன்றி.
.
உங்களது சேவை மேலும் எமக்கு தேவை என தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: November 12, 2016 at 15:12
மிக்க மகிழ்ச்சி ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.