வரவுச் செலவு திட்டம் சமர்ப்பிப்பு – வல்வெட்டிதுறையில் 25 மில்லியன் ரூபாவில் நீச்சல் தடாகம்
அமைப்பது உறுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2016 (திங்கட்கிழமை)
இலங்கையின் 70 ஆவது வரவுச் செலவு திட்டம் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 355 வது பிரிவில் வல்வெட்டித்துறையில் கின்னஸ் புகழ் வீரர் குமார் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகத்தினை நிர்மாணிப்பதற்கு 25 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்மொழியப்பட்டுள்ளது.
25 மில்லியன் ரூபா செலவில் வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்
விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டும் இலங்கை அரசு விளையாட்டுத் திட்டங்களுக்காக 1775 மில்லியன் ரூபா தொகையை ஒதுக்கியுள்ளதுஇதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 25 மில்லியன் ரூபா செலவில் நீச்சல் தடாகமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
நீண்டகால அடிப்படையில் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, இலங்கை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பட்ஜெட் பிரேரணைகளைச் சமர்ப்பிக்கும்போது நிதி அமைச்சர் ரவி கருண நாயக்க பல புதிய திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டு 1775 மில்லியன்ரூபாய்கள் வரை அடுத்த வருடம் செலவிட இருப்பதாகக் கூறியிருக்கின்றார்.
றியோவில் இடம்பெற்றுள்ள மாற்றுவலுவுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தத் தடவை ஈட்யெறிதலில் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்த இலங்கை ஒலிம்பிக் போட்டியில் எந்தப் பதக்கத்தையும் வெல்லவில்லை. எங்கள் கிராமங்களில் பல திறமைமிக்கவர்கள் இருக்கின்றார்கள். இவர்களை நாம் தேட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இளவட்டங்களிடையே திறமையைத் தேடும் பணிக்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வல்வையில் மேற்குறித்த நீச்சல் தடாகம் அமைப்பது சம்பந்தமான செய்தி சகல அரச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா நகுலசிகாமணி (Canada)
Posted Date: November 14, 2016 at 17:08
வல்வையில் வரலாற்றில் இடம்பெற்ற ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக நீச்சல் தடாகம் அமைப்பதையிட்டு தற்போதைய அரசைப் பாராட்டுவதோடு வல்வை மக்களுடன், நாமும் மகிழ்ச்சியடைகிறோம்.
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம், கனடா.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.