இலங்கையின் 21 வது கடற்படை தளபதியாக ட்ரவிஸ் சின்னையா
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2017 (வெள்ளிக்கிழமை)
இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா (Travis Jeramy Liyanduru Sinniah) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னையா, வீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம, ரணசூர (மூன்று முறை) மற்றும் உத்தம சேவா ஆகிய விருதுகளைப் பெற்ற கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியாவார்.
புதிய கடற்படைத் தளபதியின் சேவைக் காலம் இம்மாதம் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் இலங்கை கடற்படையின் பல வெற்றிகளுக்கு வழி வகுத்ததாகக் இவர் குறிப்பிடப்பட்டாலும், முன்னைய அரசின் ஆட்சிக் காலத்தில் 'Travis the Americcan agent' எனக் குறிப்பிடப்பட்டு ஒதுக்கப் பட்டிருந்தார் என்றும் இதனால் இவர் கடற்படையை விட்டு விலகி ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்திருந்தார் எனவும் கூறப்படுகின்றது.
ஆனாலும் பின்னர் புதிய அரசின் ஆட்சியைத் தொடர்ந்து மீண்டும் இலங்கை கடற்படையில் சேர்ந்து தற்பொழுது கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக உள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.