சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
சுற்றுச்சூழல் வாரத்தை (Environmental week 2016) முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் (Urban council Valvettithurai) முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு உலகசுற்றுச்சூழல் தினத்தைமுன்னிட்டுமே 30 தொடக்கம் ஜுன் 5 வரை சூற்றுச்சூழல் வாரமாகநாடெங்கிலும்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொடர்பானசெயற்திட்டங்களும் விழிப்புணர்வுநிகழ்வுகழும் பல்வேறுதரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இச்சுற்றுச்சூழல்வாரத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள பல்வேறு செயற்திட்டங்களின் ஒரு அங்கமாக பொதுமக்கள் மத்தியில் சூற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கணபதிபாலர் பாடசாலைசிறார்களுடன் இணைந்து நகராட்சி மன்ற அலுவலர்கள் வல்வெட்டித்துறை சந்தி பேரூந்துதரிப்பிடத்திலும் பொதுச்சந்தை பகுதியிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு சிறுவர்கள் வீதியோரத்தில் நின்று விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அலுவலர்களுடன் இணைந்து சந்தியிலிருந்து பொதுச் சந்தைவரை சுலோகங்களை ஏந்தியவாறு நடைபவனியையும் மேற்கொண்டனர்.
வல்வெட்டித்துறை பொதுச் சந்தைக்குள்
சுலோகங்களுடன் வல்வெட்டித்துறை - பருத்தித்துறை பிரதான வீதியில்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Dushyanthi, K (Sri Lanka)
Posted Date: June 03, 2016 at 21:01
Well done. Keep it up. Hope the VVT uc will become the pioneers of Environmental Safeguarding
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.