நாம் ஏற்கனவே அறிவித்தபடி எமது இணைய தளத்தில் வல்வெட்டித்துறை.org கருத்துக்கணிப்பு (ValvettithuraiORG Poll) என்னும் புதிய பகுதியை இன்று ஆரம்பித்துள்ளோம். குறித்த இந்த புதிய பகுதியானது பிரதான பக்கத்தின் மேற்பக்க வலது பக்கத்தில் அமைந்துள்ளது.
உங்களின் கருத்துக்களையும் நீங்கள் பதிவு செய்வதன் மூலம், ஒரு விடயம் சம்பந்தப்பட்ட பொதுவான ஒரு கருத்தை வாசகர்கள் அனைவரும் அறிய இது எதுவாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
பொதுவான விடயங்கள் இதில் கருப்பொருளாக வரையப்படும். பிரதானமாக வல்வை மற்றும் வல்வை நகரசபைக்கு உட்பட்ட விடயங்களைப் பிரதிபலிப்பனவாக இவை அமைந்தாலும், தேவையான பொது விடயங்களையும் கால நேரத்திற்கு ஏற்றவாறு உள்ளடக்கும்.
இப் புதிய பகுதியின் நோக்கம், குறித்த ஒரு விடயம் சம்பந்தமான வேறுபட்ட கருத்துக்களின் விகிதங்களை வாசகர்களிற்கு தெரிவிக்க முனைவதாகும்.
வாசகர்களாகிய நீங்களும் நல்ல, தகுந்த விடயங்களை அனுப்பினால், அவை கவனத்தில் எடுக்கப்பட்டு இப்பகுதியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.