இந்தியாவின் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கருமண்டபம் என்ற இடத்தில் வல்வெட்டிதுறையைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் செல்வநாயகம் செல்வேந்திரன் என்ற 56 வயது நபரே கொல்லப்பட்டவராவர். இவருக்கு 3 பிள்ளைகள் உண்டு.
தமது வீட்டுக்கு முச்சகரவண்டி ஒன்றில் திரும்பிய நிலையில் வீட்டின் முன்னால் வைத்து அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் கொலைக்கான காரணம் எவையும் இன்னும்
வெளியாகவில்லை.
கொல்லப்பட்டுள்ள திரு.செல்வநாயகம் செல்வேந்திரன் 1990 ஆம் ஆண்டு வரை வல்வெட்டித்துறையின் ஊரிக்காட்டுப் பகுதியில் வசித்து வந்து, பின்னர் தமது குடும்பத்துடன் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்று குடியேறியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.