நெடியகாடு பிள்ளையார் வேட்டைத் திருவிழா இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2017 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச் சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 6 ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா இன்று நடைபெற்றது.. மாலை 0545 மணியளவில் விநாயகப் பெருமான் வேட்டை ஆடுவதற்காக வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வந்தடைந்து வேட்டைத் திருவிழா சுமார் 0610 மணியளவில் இடம்பெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் வைத்தீஸ்வரர் கோயில்களில் இடம்பெறவுள்ள விசேட பூசைகளைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் மாலை ஆதிவைரவர் கோயில் சென்றடைந்து தனது ஆலயம் நோக்கித் திரும்பவுள்ளார்.
இன்றைய வேட்டைத் திருவிழாவையொட்டி நெடியகாட்டு பிள்ளையார் கோயில் தொடக்கம் ஆதி வைரவர் கோயில் வரையான வீதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.