வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.கந்தன் பாலனும் கலாபூசனம் விருதுக்கு தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2016 (திங்கட்கிழமை)
யாழ் மாவட்டத்திலிருந்து கலாபூசணம் விருது பெறுவதற்காக 31 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் கலை வளர்ச்சிக்காக தங்களின் வாழ் நாட்களை அர்ப்பணித்து சேவையாற்றிய கலைஞர்களை கௌரவித்து வழங்கப்படுகின்ற கலாபூசணம் அரசு விருது வழங்கும் விழா இவ்வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி கொழும்பு 7 இல் அமைந்துள்ள நெலும் பொக்குண சர்வதேச கலையரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.கந்தன் பாலன் அவர்களும் கலாபூசனம் விருது வழங்கி கௌரவிற்கப்படவுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.