பொலிகண்டி பாரதி வி.கழக உதைபந்து - யங்கம்பன்ஸ் அணி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2016 (திங்கட்கிழமை)
பருத்திதுறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் பொலிகண்டி பாரதி விளையாட்டு கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான 07நபர் கொண்ட உதைப்பந்தாட்ட தொடரின் சூப்பர்08 போட்டிகள் மின்னொளியில் நேற்று இடம்பெற்றது.
நேற்று இடம்பெற்ற மின்னொளியிலான சூப்பர்-08 போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் குறிஞ்சி குமரன் அணியை எதிர்த்து யங்கம்பன்ஸ் அணி மோதியது ஆட்டத்தின் முதல் பாதியின் 15வது நிமிடத்தில் யங்கம்பன்ஸ் அணிக்கு தண்ட உதைப்பு கிடைத்தது அதனை கோலாக மாற்றினார் தர்சன் முதல் பாதியாட்டம் 01:00 என்ற அடிப்படையில் நிறைவுற்றது.
இரண்டாவது பாதியாட்டத்தின் 31வது நிமிடத்தில் பிரகாஷ் கோலினை பெற்றார். அடுத்த 48வது நிமிடத்தில் மீண்டும் தர்சனால் நீண்ட தூரத்திலிருந்து அற்புதமான கோல் ஒன்று பெற இறுதி ஆட்ட நேர முடிவில் 03:00 என்ற ரீதியில் குறிஞ்சி குமரன் அணியை வீழ்த்தியது யங்கம்பன்ஸ் அணி. தர்சன் 02 கோலினையும், பிரகாஷ் 01 கோலினையும் பெற்றுக்கொண்டார்கள். ஆட்ட நாயகனாக யங்கம்பன்ஸ் அணி வீரர் தர்சன் தெரிவு செய்யப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.