நேற்று முன்தினம் (17.09.1016) மக்கள் களரி நாடகவிழா நடமாடும் அரங்கில் யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தினரால் மேடையேற்றப்பட்ட"கருச்சிதைவு " என்னும் நாடகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு அரங்கின் பல்பரிமான வளர்ச்சிப் போக்கின் புதிய தரிசனங்களுக்குள்ளும் பார்ப் போரை இட்டுச் சென்றது. இவ் ஆற்றுகையினை யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழக நடிகர்களான இ.வினோதன், த.கில்மன் ,ம.சுலக்ஷன்,த.கஜன் , போன்றோர் பங்குபற்றினர்.
இன் நாடகத்திற்கான காட்சி அமைப்பினை ம. சுலக்ஷன், .மகிந்தன்த.கஜன்இ.வினோதன்,த.குணரூபன்,த.கில்மன்ஆகியோரும் இணைந்து மேற்கொண்டனர். ஒளி விதானிப்பினை இ.மகிந்தன் மேற்கொள்ள, இன் நாடக நெறியாள்கையினை - தி தர்மலிங்கம் தனது பாணியில் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ,ஒளிப்படங்கள் -சிவராஜ் இந்நாடக முறைமை ஏனைய நாடகங்களை விட மாறுபட்ட முறையில் ஆற்றுகை செய்யப்பட்டது.
யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தையும், சிந்தனைகள் பலவற்றையும் உருவாக்கக்கூடியவகையில் மிகவும் வித்தியாசமான முறையில் வெளிப்பாடுகள் ஆற்றுகை செய்யப்பட்டது . இது ஒரு " பூட்த்தோ " நாடக வகைமையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் எந்த வித வசனங்களோ ,உரையாடல்களோ இல்லாமல் தனி உடல் மொழி மூலமாக நடிகன் அரங்கில் அழகிய கோடுகளை அர்த்தப்பாடுகளுடன் வெளிப்படுத்தும் வடிவமாகும்.
மெதுவான இசையோடு 1 மணித்தியாலங்கள் 4 நடிகர்கள் உடல்முழுவதும் வெள்ளை நிறமாக தலை முடிகள் அகற்றப்பட்டு மொட்டை வடிவமாக இடுப்பில் சிறிய ஆடை மட்டுமே அணியப்பட்டு பல்வேறுப்பட்ட கடினமான அசைவுகளுடன் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது .
இந்நாடகம் மனிதன் கருவில் இருந்து பிறந்து வளர்ந்து அவன் படும் இன்னல்கள் போட்டிகள் பொறாமைகள் பதவி ஆசைகள் ஒற்றுமையின்மை என பல்வேறுபடட விடையங்களை கொண்டமைந்திருந்தது. இவ்வகை நாடகங்கள் அரங்கக் கலை வரலாற்றில் மிகவும் கவனிக்கப்படவேண்டியது அவசியம் அதுமட்டுமன்றி அதுசார் உரையாடல்களை மேற்கொள்ளுவதன் ஊடாக ஏனையவர்களுக்கும் அதன் பரம்பலையும் தனித்துவத்தையும் உணரமுடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.