தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)
கடந்த 32 வருடங்களாக இடம்பெயர்ந்து தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்திற்கான புதிய கட்டிடம் தற்பொழுது தொண்டைமான்றிலேயே திறந்து வைக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் அதன் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் எதுவும் நடைபெறாது 32 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையம் தற்பொழுது புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கவுள்ளது.
வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமாரின் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட சகலரையும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டு தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகள் தொண்டைமான்றிலேயே முன்னேடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.