உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீட்டில் கணவருடன் தனியாக வாழ்ந்து வந்த வயோதிபப் பெண் இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இரவு இடம்பெற்றுள்ளது. உடுப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய சுப்பிரமணியம்.அசுபதி என்ற வயோதிபப் பெண்ணே இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு உணவை உண்ட பின் கைகழுவச் சென்ற வேளை பின்னால் வந்த இனந்தெரியாத நபரினால் இவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகினர்த்து.
இந்தச் சம்பவம் குறித்து வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.