கலை இலக்கிய விழா இந்த வருடம் அம்மன், சிவன் கோயில் வீதியில் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் இலக்கிய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. கலைவிழா வழமைபோல் எதிர்வரும் புதுவருட தினத்தன்று அதாவது 1 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதுவரை வல்வெட்டித்துறை நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்று வந்த விழா, இந்தமுறை வல்வை அம்மன், சிவன் கோயில்களின் பொது வீதியில் இடம்பெறவுள்ளது.
நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலில் குறித்த தினத்தன்று வீதி உலா இடம்பெறவுள்ளமையே இதற்கு காரணம் எனத் தெரிய வருகின்றது..
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினால் பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் நிதியினைக்கொண்டு கடந்த 4 வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக இலக்கிய விழா நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
மு.பார்த்தீபன் (uae)
Posted Date: December 20, 2014 at 13:13
கலை விழா சிறப்புற அமைய வாழ்த்துக்கள்
SA.PE.RAJKUMAR (CANADA)
Posted Date: December 20, 2014 at 01:15
vanakkam nalla seyal vazhthukkal
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.