நெடியகாடு பிள்ளையார் பூங்காவான உற்சவம் நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/09/2016 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. சுமார் 7 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் வீதியுலா இடம்பெற்று சுமார் 9 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட பூங்காவனத்தில் வந்தமர்ந்தார்.
பூங்காவனத்தில் இடம்பெற்ற ஊஞ்சற்பா மற்றும் பூசைகளைத் தொடர்ந்து, கோயிலின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் சிறுவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
பூங்காவனத் திருவிழாத் திருவிழாவை முன்னிட்டு ஆலய வீதிகள் மின்குமிழ்கள் மற்றும் மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், திருக்குளமும் மெருகூட்டப்பட்டிருந்தன.
பூங்காவனத் திருவிழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் நேற்று இரவு நெடியகாடு பிள்ளையார் வீதியில் உடுப்பிட்டி பாலேந்திரன் குழுவினரின் தவில் நாதஸ்வர கச்சேரி, யாழ் பாலமுருகன் குழுவினரின் தவில் நாதஸ்வர கச்சேரி, கணபதி பாலர் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகள், வல்வை முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள் மற்றும் முதன் முதலாக யாழ் மண்ணில் பல்குரல் வேந்தன் "சண்" வழங்கும் பல்குரல் (மிமிக்கிரி) போன்ற விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.