கணபதி படிப்பகத்தின் ஜம்பதாவது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா நிகழ்வுகளின் வரிசையில் முதல் நிகழ்வாக படிப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நன்நாளான 14.09.1967 சிறப்பிக்கும் வகையில், இன்று 14.09.2017 அன்று படிப்பகத்தின் பொன்விழாப் பாடல் ஒன்று வெளியீடு செய்யப்படவுள்ளது.
வி.டினேஸ்கரன் அவர்களின் இசையில் எஸ்.சிவா அவர்களின் பாடல் வரிகளுடன், ப.தனுராஜ் அவர்களின் குரலில், R.ராஜேஸ் அவர்களின் ஒலிப்பதிவில் குறித்த பாடலானது உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்னும் சிலவாரங்களில் படிப்பகத்தின் வரலாற்றினையும் மற்றும் பொன்விழா போட்டிகளில் வெற்றிபெற்ற ஆக்கங்களையும் உள்ளடக்கிய பொன்விழா சிறப்பபு மலர் ஒன்று வெளிவரஇருப்பதுடன், கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் கலைநிகழ்வுகள், மற்றும் மேடை நாடகங்களுடன் கணபதி படிப்பக பொன்விழா நிகழ்வுகள் மிகவும் விமர்சையாக நடைபெறக் காத்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.