வல்வெட்டித்துறை ஆதிகோவில் ஆதிவைரவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் நாள் திருவிழாவும் பிரதான திருவிழாவுமான பூங்காவன திருவிழா இன்று நண்பகல் நடைபெற்றது. நண்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து மாலை 0530 மணி வரை பூங்காவன நிகழ்வுகள் நீடித்திருந்தன.
பூங்காவனத்தை முன்னிட்டு ஆலய வீதிகள் மற்றும் ஆதிகோவில் ஆதிவைரவர் பிரதான வீதி என்பன மரங்கள் மற்றும் மின் விழக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இன்றைய பூங்காவனத் திருவிழாவில் வழமையைவிட ஏராளமான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர். பூங்காவனத் திருவிழாவில் பெண் தவில் கலைஞரின் சமா இடம்பெற்றது. நாளை மறுதினம் தீர்த்தேர்சவம் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.