அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அனர்த்த இடர் நிலையில் மக்களை ஒருங்கிணைத்து அனர்த்தத்திலிருந்து தப்புவது தொடர்பிலும் அனர்த்த நிலையில் மேற்கொள்ள வேண்டிய முகாமைத்துவ செயற்ப்பாடுகள் பற்றிய ஒத்திகை நடவடிக்கையானது இன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்றது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் வல்வெட்டித்துறையில் அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை நடவடிக்கையானது இன்று பிற்பகல் 02.00 மணிக்கு நடாத்தப்பட்டது. சுனாமி எச்சரிக்கை கோபுரம் அமைக்கப்பட்டுள்ள 78 பிரதேசங்களில் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறையின் ஊரிக்காட்டு பிரதேசத்தில் சிதம்பரக் கல்லூரி மைதானத்தின் வடகிழக்கு மூலையில் அனர்த்தம் தொடர்பாக எச்சரிக்கவென அனர்த்த முகாமைத்துவ நிலையத்திளால் எச்சரிக்கை கோபுரம் Tsunami early warning centre) ஒன்று கடந்த 2006 ம் ஆண்டளவில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறையின் ஊரிக்காட்டு பிரதேசத்தில் சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தொடர்ந்து பொதுமக்களின் குடும்ப அட்டைகள் பதிவு செய்யப்பட்டன இவை தொடர்பான காட்சிகளைக் கீழே காணலாம் ,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.