ஆயிரக் கணக்கான அடியார்கள் மத்தியில் சந்நிதி சப்பறத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2015 (வியாழக்கிழமை)
ஆயிரக் கணக்கான அடியார்களின் அரோகரா ஒலிகளுக்கு மத்தியில் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி 14 ஆம் திருவிழாவும் பிரதான திருவிழாக்களில் ஒன்றான சப்பறத் திருவிழா சற்று முன்னர் 9 மணியளவில் நிறைவுபெற்றது.
மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, முருகப் பெருமான் சப்பறத்த்தில் சுமார் 8 மணியளவில் வெளிவீதியுலா வந்தார்.
இன்றைய சப்பறத் திருவிழாவையொட்டி காலை முதல் நூற்றுக்கணக்கான காவடிகள், துலாக்காவடிகள் மற்றும் பாற்சொம்புகள் என அடியார்களின் நேர்த்திக் கடன்கள் திருவிழா முடிந்தபின்னரும் தற்பொழுதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மேலதிக படங்களை எமது கீழ்வரும் Facebook இணைப்பில் பார்வையிடலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.