தெற்கில் பதற்றத்தை ஏற்படுத்திய பொருள் எரிகல்லாக இருக்கலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2017 (வெள்ளிக்கிழமை)
தென்மாகாணத்தில் சில இடங்களில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பாரிய வெளிச்சம் மற்றும் சத்தத்துடனான பொருள் எரிகல்லாக இருக்ககூடும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் நட்சத்திர மற்றும் வானிலை பீடத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான எரிகல் ஒரு செக்கனில் 65 கிலோமீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி செல்லக்கூடியது. இவ்வாறு செல்லும்போது பூகோளத்தில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக ஒட்சிசனுடன் மோதி நெருப்பு பிளம்பாக மாறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பூமியை நோக்கி வேகமாக பொருள் இவ்வாறு வருவதாயின் எரிகல்லாக இருக்ககூடும் என்றும் தெரிவித்த அவர் அழுத்தத்தின் காரணமாக வெடித்து சிதறக்கூடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். (News.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.