சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் மெல்லக்கற்போருக்கான வகுப்புக்கள் கம்பர்மலை அ.த.க பாடசாலைமற்றும் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டன.
கம்பர்மலை அ.த.க பாடசாலையில் 51 மாணவர்கள் மெல்லக்கற்போருக்கான வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டு அவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் நேற்று இவ்வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
கம்பர்மலை அதிபர் எஸ்.ரமணசுதன் ஆகியோர் தலைமையில் அந்தந்தப்பாடசாலைகளில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் சிவன் அறக்கட்டளை நிறுவனம் சார்பாக வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உபதலைவர் க சதீஸ் கலந்துகொண்டார்
தொண்டைமனாறு வீ.ம வித்தியாலயத்தில் 91 மாணவர்கள் மெல்லக்கற்போருக்கான வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டு அவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் நேற்று இவ்வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
தொண்டைமனாறு வீ.ம.வி அதிபர் இரா.ஸ்ரீநடராசா தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வில் சிவன் அறக்கட்டளை நிறுவனம் சார்பாக வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உபதலைவர் க சதீஸ் கலந்துகொண்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.