தொண்டமனாறு வீரகத்தி மகாவித்தியாலய மாணவர்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/09/2017 (வியாழக்கிழமை)
தொண்டமனாறு வீரகத்தி மகாவித்தியாலயத்தின் ஆறு மாணவர்கள் அகில இலங்கை தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் ஓட்டப்போட்டிகளில் பங்குபற்ற உள்ளனர். இதனையொட்டி குறித்த மாணவர்களுக்கான காலணிகளை சிவன் அறக்கட்டளை வழங்கியுள்ளது.
சிவன் அறக்கட்டளை சார்பாக அதன் இணைப்பாளரும் முன்னாள் வல்வை நகரசபை உபதலைவருமான திரு.க.சதீஸ் அவர்கள் பாடசாலை அதிபரிடம் காலணிகளை நேற்று முன்தினம் வழங்கி வைத்துள்ளார்.
அத்துடன் குறிப்பிட்ட மாணவர்களின் சக்தியை மேம்படுத்தும் நோக்கில் சத்துணவுப்பொருட்களையும் அவர்களிற்கு சிவன் அறக்கட்டளையால் வழங்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.