வல்வை மகளிர் கல்லூரியில் சாதாரண தரம் கற்கும் மாணவர்களின் கல்லி தரத்தினை உயர்த்துவதற்கான விசேட வகுப்புக்களை நடாத்துவது சம்பம்தமாக பாடசாலை அதிபர் மற்றும் சிவன் அறக்கட்டளை நிறுவுனர் கணேஸ்வரன் வேலாயுதம் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதற்கிணங்க சிவன் அறக்கட்டளை நிறுவுனர் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் அக்கறை கொண்டு விசேட வகுப்புக்களை நடாத்துவதற்கென இரு மாதங்களுக்குரிய கொடுப்பனவாக ரூபா 40000 இனை பாடசாலை அதிபரிடம் கடந்த 31 ஆம் திகதி கையளித்துள்ளார்.
கம்பர்மலை மகாவித்தியாலயத்திற்கும் உதவி
கம்பர்மலை மகாவித்தியாலயத்தில் மெல்லக்கற்கும் மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கற்றல் செயற்பாடுகளுக்குரிய ஆசிரியர்களிற்கான கொடுப்பனவு தொகையினை சிவன் அறக்கட்டளை நிறுவுனர் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் கடந்த 31 ஆம் திகதி பாடசாலைக்கு விஜயம் செய்து வழங்கி வைத்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.