இந்த செயலமர்வு இரண்டு நாட்கள் நடைபெற்றது. தகவல் அறியும் சட்டம் குறித்து அரச அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்றை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சும் அரச தகவல் திணைக்களமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. இதற்கமைவாகவே இந்த செயலமர்வு நடைபெற்றது.
இந்த செயலமர்வில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ,முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண அரச அதிகாரிகளும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர் .
இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ரமணி குணவர்த்தன ,ஜே. டடிபிள்யூ .எஸ். கிற்சிறீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (News.lk)