வல்வெட்டித்துறையில் வல்வை பெண்கள் இளைப்பாறும் இல்லம் எனும் பெண்களுக்கான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை அன்று உதயமான இந்த இல்லம் பற்றிய மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வல்வை இளைப்பாறும் இல்லம் (பெண்கள்)
கடந்த பல சகாப்தகாலமாக ஈழத்தமிழ் மண்ணில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக தமிழர்களாகிய நாம் பல பயங்கரமான செயற்பாடுகளுக்கும், இன்னல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களானோம் அது மட்டுமல்லாமல் தமது வாழ்வாதாரமும், பிணைப்புக்களும், மிகுந்த பாதிப்புள்ளாகிச் சிதறி போயின. முடிவில்லாத துயரங்களுக்கு மத்தியில் நமது இருப்பே கேள்விக்குறியாகிய போது நாம் திசை மாறிய பறவைகளாக அபாயமேன உலகின் பல பாகங்களுக்கும் சிதறி அடிக்கப்பட்டோம்.
பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோர் , அக்காவைப்பிரிந்த தங்கை எனவும் அண்ணனைப் பிரிந்த தம்பி எனவும், தமது குடும்பக் கட்டமைப்பே சூனியமாக்கப்பட்டது. இதன் பின் விளைவாக நமது ஈழத்தமிழ் மண்ணில் பல முதியவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டனர். இவ்வாறு நிர்க்கதியாக்கப்பட்ட முதியவர்களில் எமது குடும்ப உயிர் நாடியாக விளங்கும் பெண்களின் தொகையே மிக அதிகமாக காணப்படுகின்றது.
இப்படி நிர்க்கதியாக நிற்கும் முதுமையடைந்த பெண்கள் தன்னந்தனியாக அனுபவிக்கும் துயரங்களைக் கண்டு மனம் நொந்த உள்ளங்கள் பற்பல அடிப்படையான உள்ளங்களில் எண்ணக்கருவில் தோன்றியது தான் பெண்களுக்கான வல்வை இளைப்பாறும் இல்லம் .
மக்கள் சேவையே மகேசன் சேவை என்னும் நோக்குடன் தள்ளாத வயதில் தனிமையில் வாழும் பெண்களுக்கு அபாயம் கொடுத்து ஆதரித்து மனநிம்மதியைக் கொடுக்க வேண்டும். என்ற எண்ணத்துடன் செயற்பட்டு நன்றே செய் அதை இன்றே செய் எனும் கூற்றிக்கிணங்க திருத்தமாக செயற்பட்டு பல இடையூறுகளுக்கு மத்தியிலிலும் இவ்வில்லத்தை ஊரிக்காட்டில் இயங்க வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வில்லத்தின் தொலைநோக்கு பின்வரும் மூன்று கட்ப்பாட்டினுள் அடங்கும். மிக விரைவில் இவ்வில்லம் செயற்படவுள்ளது என்பனையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் வாலாம்பிகா சமேத வைத்தீஸ் வரனினதும் அருட்கடாட்சத்தை வேண்டியும் நடாத்தப்படும் இல்லமாகும்.
இவ் இல்லம் வர்த்தக நோக்கமற்ற இலாபம் கருதாது இயங்கும் நிலையமாகும். (THIS HOME IS BEING RUN AS NON COMMERCIAL AND A NON PROFIT MAKING ORGANIZATION)
பிள்ளைகளாலும் உறவினர்களாலும் உடன் இருந்து பராமரிக்க முடியாது போனவர்களினதும் தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்து கொள்ள முடியாதவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் அவர்களது நலன்களைப் பேணுவதற்காகவும், அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் நடாத்தப்படும் இல்லமாகும்.
இவ்வில்லத்தின் சேவைகளை பெற்று பயனடைய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Sivakumarasamy (Sri Lanka)
Posted Date: April 30, 2017 at 05:45
Dear Sivakumar, its a great effort of the elders in our region. Keep it up.. We all support our maximum.
T. Sivakumarasamy
வித்தியா (Srilanka)
Posted Date: April 30, 2017 at 04:35
வாழ்த்துக்கள்......
S.Sivanesan (Sri lanka)
Posted Date: April 30, 2017 at 01:27
மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி.யோகானந்தவேல் குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்கள் .சி.சிவநேசன்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.