(கடந்த 16 ஆம் திகதி குறித்த இந்த வேண்டுகோள் எமக்கு அனுப்பப்பட்டிருந்தது. உரிய நேரத்தில் பிரசுரிக்காமைக்காக மனம் வருந்துகின்றோம்)
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா உட்பட வெளிநாடுகளில் குடியேறியிருந்த எமதுமக்கள் தத்தமது இடங்களுக்குகுடியமரத் தொடங்கினர். இது போன்ற இன்னோரன்ன காரணங்களால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குவரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு உயரும் நிலை ஏற்பட்டது.
இதற்கு எமது பிரதேச வைத்தியசாலையும் விதிவிலக்கல்ல. இது போன்றே யாழ் மாவட்டத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளினதும் நிலையாகும். இதன் காரணத்தினால் எமது பிரதேசமக்களினது தேவைகளை வல்வெட்டித்துறை பிரதேசவைத்தியசாலையே பூர்த்திசெய்யவேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.
96 கட்டில்களை கொண்ட எமது பிரதேசவைத்தியசாலைக்கும் இதனைவிடக் குறைந்தளவான கட்டில்களின் தொகையினைக் கொண்ட பிரதேசவைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு, வளங்கள், விநியோகங்கள் போன்றவற்றில் பெரிதளவிலான வேறுபாடுகள் இல்லாமையைகாணக்கூடியதாக இருக்கின்றது.
எமது பிரதேசவைத்தியசாலை ஆதாரவைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்படும் பட்சத்தில் வளங்கள், விநியோகங்கள் போன்றவற்றை எமதுமுயற்சிகளின் மூலம் பெற்றுக் கொள்வதற்குவாய்ப்பிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுவரை எமதுபிரதேசமக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கு இப் பகுதிமக்களும், நோயாளர் நலன்புரிச் சங்கத்தினராகிய நாமும் முன்வரவேண்டிய கடப்பாடுடையவர்களாக உள்ளோம்.
கீழேகுறிப்பிட்டுள்ள தேவைகளை விரைவில் வழங்குவோமானால் எமது பிரதேசமக்கள் தமக்குரியதேவைகளைச் சிரமமின்றிப் பெற்றுக்கொள்ளமுடியும்.
01. ஸ்கானிங் வசதி:-
கர்ப்பிணித் தாய்மார்களும் இதரநோயாளர்களும் ஸ்கானிங் செய்துகொள்வதற்காக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்றுவரும் சிரமங்களை அவதானித்து இதற்கான ஸ்கான் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு சங்கம் நடவடிக்கையை மேற்கொண்டு அதனை வழங்கியது.
இந்த இயந்திரம் தொடர்ந்து சேவையாற்றுவதில் அடிக்கடி தடங்கல் ஏற்பட்டமையினால் சுகாதாரத்திணைக்களம் புதிய இயந்திரமொன்றை வழங்கியமையை அடுத்து வைத்தியசாலை தொடர்ந்தும் அச்சேவையினை தடங்கலின்றி ஆற்றிவருகின்றது. இருந்தபோதும் இச் சேவையினை மேற்கொள்வதற்கு விசேட வைத்திய நிபுணர் ஒருவரைத் திணைக்களம் அனுப்பிவைக்க முன்வராத காரணத்தினால், விசேட வைத்திய நிபுணரை இரண்டு கிழமைகளுக்கு ஒருதடவை வரவழைத்து எமது தேவையை நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளோம். இதற்காக அந்த விசேட வைத்திய நிபுணருக்கு ஒரு தடவை வருகை தருவதற்காக ரூபா 7000/- வரைசெலுத்திவரும் நாம் ஒரு வருட கொடுப்பனவிற்கு ரூபா 175,000/- வரை பரோபகபரிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
02. தைரோயிட் பிரச்சினை உள்ளநோயாளிகள் (Hypothyrodism) வல்வெட்டித்துறை பிரதேசவைத்தியசாலையில் 50 பேர் வரையான தைரோயிட் பிரச்சனையுள்ள நோயாளிகள் சிகிச்சையினை தொடர்ந்துபெற்றுக் கொண்டுவருகின்றார்கள். இவர்களுக்கான இரத்தப்பரிசோதனையொன்றினை மேற்கொள்வதன் மூலம் இவர்களின் நோய்த்தாக்கம் அதி;கரித்துச்செல்கின்றதா அல்லது குறைவடைகின்றதா என்பதை அவதானித்து இவர்களுக்குச் சிபார்சு செய்யும் மருந்தின் அளவினைக் கூட்டியோ அல்லது குறைத்தோ வழங்கலாம்.
இதற்கான இரத்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு எமது வைத்தியசாலைக்குத் தேவையான தொழில்நுட்பவியலாளரும், அதற்கான இரசாயனமருந்துவகைகளும் இல்லாதுள்ளது. யாழ் மாவட்டத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையிலும் மட்டுமே இதற்கான இரத்தப் பரிசோதனையினைச் செய்துகொள்ளமுடியும். இவ் வைத்தியசாலைகளிலும் வளங்கள் பற்றாக்குறையாக உள்ளமையினால் எமது நோயாளர்களை அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியாதுள்ளது.
இதன் காரணத்தினால் தனியார் வைத்தியசாலைகளுக்கும், தனியார் ஆய்வு கூடங்களுக்குமே எமதுநோயாளர்களை அனுப்பிவைத்து பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டியவர்களாக உள்ளோம். ஒருநோயாளியை ஒரு தடவையாவது அனுப்பிவைப்பதாயிருந்தால் கூட வருடமொன்றுக்குரூபா1300/- ஒரு நோயாளிக்கு செலவு செய்ய வேண்டுமாயின் 50 நோயாளிகளுக்கும் ரூபா65000/- வரை தேவையேற்படும்.
03. குடிதண்ணீர் விநியோகம் :-
கடந்தகாலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வைத்தியசாலைத் தேவைகளுக்கான குடிதண்ணீர் வழங்கப்பட்டமையால் இதற்கேற்றவாறு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு குடிதண்ணீர் வழங்கப்பட்டுவந்தது. தற்காலம் தேவையான அளவுகுடி தண்ணீர் வழங்கப்பட்டுவருகின்றமையாலும், தேவைகள் அதிகரித்தமையாலும் அதற்கேற்றவாறுவசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
இதன் பிரகாரம் நோயாளர்களுக்குப் புறம்பாகவும், சமையலறைக்கு புறம்பாகவும், ஊழியர்களுக்குபுறம்பாகவும் இரண்டுதண்ணீர் தாங்கிகளை அமைத்து அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. தாங்கிகள் இரண்டுக்கும் அவற்றிற்கான பைப் லைனை அமைப்பதற்குமென ரூபா100,000/- மதிப்பிடப்பட்டுள்ளது.
04. கட்டாக்காலிகால்நடைகளைகட்டுப்படுத்தல் :-
அம்புலன்ஸ் வாகனம் தரிப்பிடத்திற்குச் செல்லும் பாதைதிறந்தபாதையாக இருப்பதனால் கட்டாக்காலி ஆடு மாடுகளும் எந்நேரத்திலும் நோயாளர்களை பார்வையிடுவதற்கு வருபவர்கள் இந்தபாதையை பாவிப்பதனாலும் இதனைகட்டுப்படுத்துவதற்காகப் பாதையின் தொடக்கத்தில் கேற் ஒன்றை அமைக்கவேண்டியுள்ளது. இந்தவேலையை மேற்கொள்வதற்காக ரூபா 50,000/- மதிப்பிடப்பட்டுள்ளது.
05. இதரதேவைகள்:- திணைக்களத்தினால் வழங்கப்படும் அஸ்பிறின், கிளிகிளசைட் ((Glyclazide) அம்ளோடிப்பின் (Amlodipine) போன்றமருந்துவகைகளுக்கும் சிலசமயங்களில் தட்டுப்பாடுஏற்படுகின்றது. கிளினிக்கிற்குவரும் நோயாளர்கள் இவற்றைத் தொடர்ந்து எடுப்பதற்கு ஏற்றவாறு அவற்றையும் நாம் வழங்க ஒழுங்குகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.
மேலேகுறிப்பிட்ட தேவைகளுக்கும்; இதர அத்தியாவாசிய தேவைகளுக்கும் பNhரபகாரிகளிடம் உதவியை எதிர் பார்க்கும் அதேவேளை இத் தேவைகளுக்குதிணைக்களத்துடன் தொடர்புகொண்டுஅவற்றைப் பெற்றுக் கொள்ள எம்மாலான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆதலினால்,கொடையுள்ளம் கொண்டோரிடமிருந்து இச் சேவைக்குதங்களால் முடிந்த நிதிஉதவியினை அன்புடன் வேண்டிநிற்கின்றோம். ஊரில் நேரடியாக நிதிதிரட்டுவதற்கான அனுமதியைஎமது நலன்புரிச் சங்கத்தின் உபசெயலாளர் திரு.து.சக்திவேல் அவர்களுக்கு வழங்கியுள்ளோம் என்பதையும் அன்புடன் அறியத் தருகின்றோம்.
வல்வெட்டித்துறை இலங்கைவங்கியில் எமது (நோயாளர் நலன் புரிச் சங்கம்) கணக்கு இலக்கம் - 75910691
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.