சென்னையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் பசுமைத் தாயகம் சார்பில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி 167-வது வட்டம், ஸ்டேட் பேங் காலனி உடற்பயிற்சி கூடம் அருகில் உள்ள பார்க்கில் மரங்கள் வெட்டப்பட்டது. இதனை கண்டிக்கும் விதமாக, வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் பசுமைத் தாயகம் சார்பில் நடைபெற்றது.
போராட்டத்தின்போது, சுற்றுச்சூழலை பாதுகாப்போம், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும், மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்தில் ஆலந்தூர் பகுதி பசுமைத் தாயகம் ஆலோசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் என தமிழக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.