தீருவிலில் 50M 8 தடங்கள் கொண்ட நீச்சல் தடாகம், முன்பகுதி பூங்காவாக அமையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2016 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள தேசிய தரத்திலான நீச்சல் தடாகம் 50 மீட்டர் நீளமுடையதாகவும் 8 தடங்கள் கொண்டதாகவும் அமையவுள்ளது.
சுமார் 100 பரப்பளவைக்கொண்ட தீருவில் பொது பூங்கா பகுதியில் தீருவில் குளத்தை அண்டிய பகுதியில் நீச்சல் தடாக வலயம் அமையும் என்றும் முன்பகுதி பூங்காவாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் வடமாகாணசபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்கள் எமக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த இந்த நீச்சல் தடாகத்தையண்டி, உடைமாற்றும் பகுதி, வாகன தரிப்பிடம் மற்றும் பார்வையாளர் அரங்கு என்பனவும் அமையவுள்ளது என சிவாஜிலிங்கம் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.