அ.மி.த.க பாடசாலை பரிசில் நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2017 (புதன்கிழமை)
யாழ் வல்வெட்டித்துறை அ.மி.த.க பாடசாலையின் 2017 ம் ஆண்டுக்கான பரிசில் நாள் நிகழ்வு இன்று பாடசாலை மண்டபத்தில் முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திரு.க.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
விருந்தினர் உரையைத்தொடர்ந்து கடந்த ஆண்டில் சிறப்பான பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இங்கு பாடசாலை மட்டத்திலும் பாடசாலைக்கு வெளியேயும் கல்வி, விளையாட்டு, பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் மற்றும் புலமைப் பரீட்சை போன்றவற்றில் சிறப்பான பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் 2017 ம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரீட்சையில் யாழ்/வல்வெட்டித்துறை அ.மி.த.க பாடசாலையிலிருந்து சிறப்புச் சித்தியடைந்திருந்த 5 மாணவர்களுக்கும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகளைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் பேச்சு, கவிதை, பாடல் மற்றும் நடனம் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளின் படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.