நாட்டில் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.
காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நாட்டின் அரைவாசி வடக்குப் பகுதியில் காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் சில பிரதேசங்களில் சப்ரகமுவ மத்திய மேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களில் நண்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி காணப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் கடற்பிரதேசங்களை அண்டிய பகுதியில் மழைத்தூறல் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.