யாழில் போதைப்பொருள் தொடர்பாக போலீசார் அறிவித்தல், கைத்தொலைபேசி இலக்கமும் அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2018 (புதன்கிழமை)
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சட்ட விரோதமான மாவா போதைப் பொருள், போதைக் குளிசை கெரோயின் மற்றும் கஞ்சாப் பொருட்களை இல்லாது ஒழிப்பதற்கு பொது மக்கள் தங்களிடம் உதவுமாறு காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் காரியாலயம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இது குறித்த சுவரொட்டிகள் வல்வை உட்பட யாழின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில் போதைப் பொருட்கள் சம்பந்தமாக பொதுமக்கள் 0766 09 30 30 என்னும் கைத்தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.