பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் அனைத்துலக மாணவர் தினமும் ஒன்று கூடலும் கடந்த 2ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது.
கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கக் கிளைகளும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.
இதையொட்டி பருத்தித்துறை – ஆத்தியடி பிள்ளையார் ஆலயம் முன்பாகப் பொங்கல் பொங்கி நட்புறவு மற்றும் பாரம்பரிய கலாசார விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கல்லூரியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்வதற்காக பழைய மாணவர்கள் பங்கு பற்றும் ஆய்வரங்குகள், கருத்தரங்குகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 08ஆம் திகதி மேற்படி கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூன்று மாடிக் கட்டிடம் மற்றும் அதிபருக்கான புதிய வதிவிடமும் திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த புதிய கட்டடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் திறந்து வைக்கவுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.