வல்வை நெடியகாடு பிள்ளையார் கோயில் 4 ஆம் திருவிழா - கவிதை - டினேஸ்கரன்
உன் அவதார கோலங்களை
அழகு அழகாக செதுக்கி உயிர்ப்பான
வடிவங்களாய் சுற்று வீதிதனில் கொண்டு
சுற்றுப்புறத்தையூம் மிளிரச் செய்து
உனை சுற்றி வரும் எம் அன்பர்களை
வாழ்வில் உயர உயர அருள்ந்திடும்
திருநீலகண்ட மைந்தனே...........
திருச்சிற்றம்பலத்தானே எம் பெருமானே........
உன்பதியை சுற்றி ஒரு கணம்
மெய் மறந்து நடந்தாலே போதும்
பெற்றிடுவோம் அருளோடு உன் வரலாறினையும்.
வல்வையின் வடபுலத்தில் வீரகத்தி விநாயகனாய்...
கப்பலுடையவனாய்;;... உன் பதியிலே திருச்சிற்றம்பலத்தானாய்
என்றழைக்க அகிலமெங்கும் அருள் கொடுக்கும் ஐங்கரனே..
உன் பெருநாளில் இரண்டாம்
தினமதுதனிலே ஏறிடையா
இரட்டை குதிரை வாகனத்திலே
உன் மனையைச் சுற்றி வந்து மனமுகந்து
ஏக்கம் உற்று வாழ்ந்திருக்கும்
எம் இனத்தவருக்கு வாரி வாரி
வழங்கிடையா உன் வரத்தை
கை கூப்பி உன் வாசல் தொழுது நிற்கின்றௌம்
நெடியம்பதி விநாயகனே.......
கவிதை வி.வல்வையரன் வி.டினேஸ்கரன்