யாழில் நடைபெறும் பனை அபிவிருத்திக் கண்காட்சியில் பல பனைசார் பொருட்கள் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2016 (திங்கட்கிழமை)
வடமாகாண சபையால் கடந்த 22 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியானது பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு யாழ் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.
வடமாகாணக் கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சங்கமும் பங்கேற்கும் இக்கண்காட்சி தினமும் காலை 10 மணியில் இருந்து மாலை 8 மணிவரை நடைபெறுகின்றது.
இக் கண்காட்சியில் பனைசார் கைவினைப் பொருட்கள், பனைசார் பாரம்பரிய உணவுவகைகள், பனைசார் ஓளடதங்கள், பனைவள அபிவிருத்தி ஆய்வு முயற்சிகள், அலங்காரப் பனைத்தாவரங்கள் பதினைந்து காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் பனை அபிவிருத்தியில் பெரும் பங்காற்றிய அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்களைக் கௌரவிக்கும் முகமாகவே, வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் அவரது நினைவு தினத்தைத் தொடக்கமாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுவது வருவது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ள இக் கண்காட்சி விற்பனை கூடத்தில் வடமாகாணத்தைத் சேர்ந்த பனை வள அபிவிருத்தி திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட பனை உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் பனங்களியில் தயாரிக்கப்பட்ட பரோட்டா, பனங்களிப் பணியாரம், மாமிசம் கலந்த ஒடியற்கூழ் என்பனவற்றுடன் மாலையில் ஆடிக்கூழ், இலைக்கஞ்சி என்பனவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் மாலைநேர நிகழ்வாக கலை நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் கண்காட்சியில் இடம்பெற்ற சில பனைசார் பொருட்களைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.