வட கிழக்கு பிறீமியர் லீக் - வல்வை எப்.சி நொதேன் எலைட் சமநிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2018 (வெள்ளிக்கிழமை)
வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரின் மூன்றாம் வார மூன்றாவது ஆட்டத்தில், நேற்று யாழ் மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் அணிகளான வல்வை எப்.சி அணி மற்றும் நொதேன் எலைட் அணி மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் வல்வை எப்.சி அணி வீரன் துசி தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோல் ஒன்றை பெற்றுக்கொள்ள முதல் பாதியில் ஒரு கோலைப் பெற்று முன்னிலை வகித்தது வல்வை எப்.சி அணி.
இரண்டாம் பாதியில் ஆட்டத்தை வேகப்படுத்திய நொதேன் எலைட் அணி ஒரு கோலைப் பெற்று ஆட்டத்தை சமப்படுத்த ஆட்ட முடிவில் 1:1 என போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
போட்டி யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியில் இரவு 0730 மணிக்கு இடம்பெற்றது.
ஆட்டநாயகனாக வல்வை எப்.சி யைச் சேர்ந்த அமித் தெரிவானார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.