சர்ச்சையான 'No Tamil to be spoken' அறிவிப்பு - 'Printing mistake' ஆம் ?
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2019 (புதன்கிழமை)
கொழும்பு 7 இல் அமைந்துள்ள பிரபல உணவு விடுதிச் சாலை நிர்வாகம் ஒன்று நேற்றைய தினம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. குறித்த அறிவிப்பில் 'தமது பணியாளர்கள் ஆங்கிலம் அல்லது சிங்களத்தில் மட்டும் பேச வேண்டும். தமிழில் பேசக் கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இனவாதத்தை கக்கும் செயல் என சமூக வலைத் தளங்களில் வைரலாக இந்த விடயம் இன்று அரசியல் மட்டத் திலும் பேசப் பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த உணவு விடுதிச் சாலையின் சார்பில் பேசிய ஒருவர் இது ஒரு Printing Mistake எனத் தெரிவித்துள்ளார். குறித்த காணொளியில் பேசிய இன்னொமொரு பணியாளர் தமக்கு இடையில் தமிழிலும் பேசக் கூடாது என அறிவுறுத்தப் படடதாகக் குறிப்பிடுகின்றார்.
குறித்த இந்த அறிவிப்பான் 'Chapter III-Fundamental Rights Clause 12-Right to Equality of the constitution' ஐ மீறும் ஒரு செயல் என்பது குறிப்பிடத்தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.