தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோயிலுக்கு புதிய தேர் கொட்டகை ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதையொட்டி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நிறைவுற்றதும் பழைய தேர்க் கொட்டகை இடித்து அகற்றப்பட்டுள்ளது.
இலங்கையிலேயே அதிக உயரம் கொண்ட இந்த தேர்க் கொட்டகை 1986 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தினாரால் எரிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் இந்தக் கொட்டகையில் தற்பொழுது வெடிப்புக்கள் ஏற்பட்டு நீண்ட கால பாவனையை இழந்திருப்பதாக கட்டட பொறியியலாளர் குழு அறிக்கை சமர்பித்துள்ளது.
இதனையடுத்து பழைய தேர்க் கொட்டகை அகற்றப்பட்டு புதிய தேர்க் கொட்டகை நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் கந்தசஸ்டி உற்சவத்தின் போது புதிய தேர்க் கொட்டகைக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
பல லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய தேர் கொட்டகை நிர்மானப் பணிகளை பொது மக்களின் நிதி பங்களிப்புடன் அடுத்தாண்டு வருடாந்த மகோற்சவத்திற்கு முன்னர் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.