வடமராட்சியில் போலி நாணய தாள்களை அச்சிட்டவர்கள் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/01/2017 (சனிக்கிழமை)
வடமராட்சி பகுதியில் போலி நாணய தாள்களை அச்சிட்டு அதனை புழக்கத்தில் விட்டு வந்த குழு ஒன்றினை நெல்லியடிப் போலீசார் ஆதாரங்களுடன் கைது செய்துள்ளனர். நேற்று வெள்ளிக் கிழமை நண்பகல் வல்லைப் பகுதியில் விடுதி ஒன்றில் ஆயிரம் ரூபா போலி நாணய தாளினை மாற்ற முற்பட்ட சமயம் நெல்லியடிப் பொலிசாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளபட்ட புலன் விசாரனியின் பின் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் பழைய வேதக் கோயிலடி இலக்கணாவத்தையைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் எனவும் மற்றைய நால்வரும் வல்வெட்டி வன்னிச்சி அம்மன் கோயிலடியைச் சேர்ந்த 17, 18. 21, 25 வயதுடையவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடச்சியாக இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்திய கணணி, பிரதியாக்கல் இயந்திரம், போலி நாணயத் தாளினை அச்சிட்டு வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகள் என்பன வன்னிச்சி அம்மன் கோயிலடியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. (வலம்புரி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.