மல்லாவி மத்திய கல்லூரிக்கு கணித மூல நிலையம் கணித ஆசிரியரினால் திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2017 (வெள்ளிக்கிழமை)
மல்லாவி மத்திய கல்லூரியில் கணித மூல நிலையம் கடந்தா 23 -06-2017 அன்று திறந்து வைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் து.யேசுதானந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக இக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முன்னாள் கணித ஆசிரியரும், இக்கட்டிடத்தை அமைத்து கொடுத்தவருமான எஸ்.சக்திவடிவேல் கலந்து கொண்டு கட்டத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர், துணுக்காய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், கல்லூரியின் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒன்றரை இலட்சம் ரூபா நிதியில் இக்கணித மூலவள நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.