கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 41.
1975ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், கன்னிகாபுரத்தில் பிறந்த நா.முத்துக்குமார், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார். நா.முத்துக்குமாருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தொடக்கத்தில் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அவர், வீரநடை படத்தின் மூலம் பாடலாசியராக அறிமுகமானார்.
தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ''ஆனந்த யாழை மீட்டுகிறாய், அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்'' பாடலுக்காக தேசிய விருது பெற்றார். சைவம் படத்தில் ''அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே'' என்ற பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றார். 2005ல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
7ஜி ரெயின்போ காலனி, தெய்வத் திருமகள், சைவம், தலைவா, சிவாஜி, சந்திரமுகி உள்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவரின் திரைப்பாடல்கள் 1500ஐ தாண்டும். அதிகபட்சமாக 2012ம் ஆண்டில் மட்டும் இவர் 103 பாடல்களை எழுதி உள்ளார். க்ரீடம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (Canada)
Posted Date: August 15, 2016 at 10:15
மிகசிறந்த கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும் அவர் எழுதிய பாடல்கள் மனதை தொடும் பாடல்கள் .நா.முத்துக்குமார் அவர்களின் உயிர் அமைதியடையட்டும் சாந்தியடையட்டும் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.