பருத்தித்துறைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2017 (திங்கட்கிழமை)
வங்காள விரிகுடாவில் யாழ் தீபகற்பத்திற்கு வட கிழக்காக வளிமண்டலத்தில் நிலவிய தளம்பல் நிலையினால் குறைந்த தாழமுக்கம் (Low pressure area) தொடர்ந்து வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலமான அழுத்தம் மேலும் வலுவடைந்து (Depression), இது மத்திய வங்காள விரிகுடாவின் கடற்கரையோரப்பிரதேசத்திலிருந்து வடமேல் திசையை நோக்கி நகரும் என்பதினால் எதிர்வரும் சில தினங்களில் வானம் கருமுகில்கள் நிறைந்ததாக காணப்படும்.
வங்காள விரிகுடா கரையோரப்பிரதேசத்தில் கடும் மழையுடன் காற்றும் வீசக்கூடும். இதன்போது கடலும் கொந்தளிப்புடன் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை உலகின் வானிலை காலநிலையை அவதானிக்கும் மையங்கள், இந்திய சமுத்திரத்தில் தாழமுக்கம் ஒன்று அவதானிப்பு நிலையில் (Invest) உள்ளது என தெரிவிக்கின்றன.
கீழே படத்தில் தாழமுக்கம் பரவியுள்ள வங்காள விரிகுடாவின் செய்மதிப் படத்தினக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.