உள்ளுராட்சி மன்ற தேர்ல் - வட்டாரமுறையில் வெற்றிபெற்ற கட்சிகளின் விபரம் மாலை 6.00 மணியளவில்
அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/02/2018 (வெள்ளிக்கிழமை)
எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு அன்றையதினம் காலை ஆரம்பமாகி மாலை 4.00 மணியுடன் நிறைவடையும்.
வட்டாரத்தில் கொத்தணிமுறையில் எண்ணப்படும் வாக்குகளுடன் தபால் மூல வாக்குகளும் சேர்த்து எண்ணப்படும். 200க்கு குறைந்த தபால் மூல வாக்குகள் இருக்குமாயின் அவற்றை வாக்குகளை எண்ணும் பணியாளர்களே எண்ணுவார்கள்.
200க்கு மேலதிகமான வாக்குகள் இருக்குமாயின் அதற்கென விசேடமாக வாக்கெண்ணும் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு பொதுக்கணக்கில் சேர்க்கப்படும்.
அன்று மாலை 6.00 மணியளவில் வட்டார முறையில் வெற்றிபெற்ற அல்லது கட்சிகளின் அல்லது சுயேட்சைக்குழுக்களின் பெயர் அறிவிக்கப்படும்.
பின்னர் விகிதாசார முறையில் வெற்றிபெற்றவர்கள் பட்டியல் மூலம் ஆசனங்களை பெற்ற கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்களின் பெயர்விபரம் எண்ணிக்கையோடு அறிவிக்கப்படும் (News.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.