'கூத்தம்பலம்' எனும் பெயரில் தமிழ் மொழியில் ஆற்றுகைக் கலைகளுக்கான சஞ்சிகை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து (2021) இலங்கை உட்பட தமிழ்நாடு மற்றும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் வெளிவர இருக்கின்றது.
இச்சஞ்சிகையினை காலாண்டுக்கு ஒருதடவை (மூன்று மாதம்) வெளியிடுவதென திட்டமிடப்பட்டுள்ளது. துறைசார் அனுபவங்களைக் கொண்ட பல புலமையாளர்களை உள்ளடக்கிய இச்சஞ்சிகைக் குழு பல நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.
இச் சஞ்சிகை வாயிலாக தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் பிரயோகத்திலிருந்து வரும் பாரம்பரிய நிகழ்த்து கலைகள் பற்றியும், நவீன நாடக அரங்கச் செயற்பாடுகள் பற்றியும், தமிழர் பண்பாட்டோடும் வாழ்வியலோடும் இணைந்த சடங்குகள் மற்றும் அதனோடிணைந்த கலையாக்கங்கள் குறித்தும் கவனஞ்செலுத்தப்படவுள்ளது.
இச்சஞ்சிகையில் பூர்வகுடிகள், பழங்குடிச் சமூகங்களின் வாழ்வியல் சார்ந்த பண்பாடுகள், சடங்குகள், கலைகள் பண்பாட்டம்சங்கள் குறித்தும், எண்ணிக்கையில் குறைந்தளவில் வாழும் இனக்குழுமங்களின் கலையாக்கங்கள் பற்றியும் முக்கிய கவனஞ் செலுத்தப்படவுள்ளது.
பால்நிலை சமத்துவ நோக்குடையதாகவும் அமையும்.
இத்தோடு இலங்கையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தினைக் கற்றுவரும் மாணவர்களுக்கான கலைத் திட்டத்தினை கவனத்திற் கொண்டும் ஆக்கங்கள் வெளிவர இருக்கின்றன.
இச்சஞ்சிகையில்...
• கட்டுரைகள்
• கலைகள் தொடர்பான செய்திகள்
• விமர்சனங்கள், திறனாய்வுகள், புதினங்கள்
• ஆற்றுகைசார் விளம்பரங்கள்
• கலை சார்ந்த ஆவணப்படுத்தல்கள்
• நேர்காணல்கள்
• புத்தகங்கள் பற்றிய தகவல்கள்
• நாடக/கூத்துப் பனுவல்கள்
• உள்ளூர் கலையாளுமைகளின் அறிமுகம்
என்பன இச் சஞ்சிகையில் வெளிகொணரப்பட இருக்கின்றன. எனவே இலங்கை தமிழ்நாடு மற்றும் புலம் பெயர் நாடுகளில் வாழும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களுக்குள் உள்ளடக்கி எதிர்பார்த்து நிற்பதுடன் இச்சஞ்சிகை சார்ந்து விருப்பம் உள்ளவர்களின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கப் படுகிறது.
கட்டுரை அளவு (A4 பாமினி எழுது, எழுத்தளவு -12, 6 பக்கங்களுக்கு மேற்படாதவாறு அமைதல் வேண்டும்.) ஆக்கங்கள் எதிர்பார்க்கும் இறுதித் திகதி 15.12.2020.
கட்டுரை அனுப்பவே மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்புக்கு:
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.