கிளிநொச்சியில் அடித்துக்கொல்லப்பட்ட சிறுத்தைக்கு அனுதாபமாக வைரல் பதிவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2018 (வெள்ளிக்கிழமை)
கிளிநொச்சியில் காட்டிலிருந்து விலகி வந்திருந்த சிறுத்தை ஒன்றை அப்பகுதி இளைஞர்கள் அடித்துக் கொன்றுள்ளார்கள். அத்துடன் சிறுத்தையைக் அடித்துக் கொல்லும் காட்சிகளை காணொளி மற்றும் புகைப் படங்களையும் பதிவேற்றியுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பரவலாக பலரிடையே அதிருப்தியையும் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமான ஏரளாமான பதிவுகள், குறிப்பாக கவிதை வடிவில், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
உலகிலேயே அழிந்து வரும் மிருகங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சிறுத்தை இனைத்தையும் பாது காக்க வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பல பொது அமைப்புக்கள் முயற்சித்து வருகின்றன.
கொல்லப்பட்ட சிறுத்தை சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் இடப்பட்ட பதிவுகளில் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் #புலி என்பது என் அறிவுக்கெட்டிய வரை இதற்கு முன் எப்பவும் அறிந்திருக்கவில்லை.
மூடர்கள்
உயிருடன் புலியைப்பிடித்த பின்னர் தான் கொன்றார்கள் என்று அறியும் போது கோபப்படுவதை விட
நான் கிளிநொச்சி வாசி என்பதில் வெட்கப்படுகின்றேன்.
ஒரு அரிய உயிரியை கொன்றிருக்கின்றார்கள்
#அதுவும் #புலியை.
#அடேய் #புலியை #நாங்களே #கொல்லலாமாடா
காட்டிலிருந்து ஒரு சிறுத்தை
நாட்டுக்கு வருகிறது என்றால்
ஓராயிரம் பாலை மரங்களும்
ஓராயிரம் தேக்கு மரங்களும்
ஓராயிரம் முதிரை மரங்களும்
கொள்ளை போய்விட்டன என்று அர்த்தம்
தூக்கி வளர்த்திட அண்ணனோ இல்லை
துடி துடித்திட அடித்தே கொன்றார்களே
எங்கள் இராச்சியத்தின் தேசிய மிருகமடா!!
நெஞ்சு கொதிக்குதடா
கொடியர்களே
உங்கள் செயல் கண்டு
வென்சினம் பிறக்குதடா
அறிவில் குறைந்த குருடர்களே
மக்கள் ஆண்மாவை வதைக்கும் மடையர்களே
சிறுத்தையை கொன்ற சின்னவரே
நீ சிரித்து மகிழ்வதில் பின்னரே.
சீச்சீ சீச்சீ அசிங்கமிது
சின்னதனமான
இயல்பு இது
குரங்கின் கையில் பூப்போலே
கொண்டாடுகிறார் பார் ஊர்மேலே
யாரிவர் என்ற கேள்விலே
தமிழர்கள் பிள்ளைகளா உண்மையிலே.
தேசிய விலங்கை கொல்வாயா
உன்னை தேவடியாள் பிள்ளை என்பாயா
யாரை திருப்தி படுத்துகிறீர்
தமிழர் நெஞ்சை வதைக்கும் கொடியவரே.
சிறுத்தை என்ற பெயர்கேட்டால்
எதிரியும் சிதறுவான்
சீறிப்பாய்ந்தால் தொலைகிறான்
சீனந்தால் கூட நடுங்குவான்
மடக்கி பிடித்து கொன்றீரா மானத்தை விட்டு வென்றீரா.
உங்களை தமிழர்கள் என்றென்ணி
வந்திருக்கும்
நீர்வைத்த பொறியைகண்டு
நொந்திருக்கும்.
உங்கள் கைகளில் வதைபடும்போது
ஒவ்வொரு கணமும் திகைத்திருக்கும்
எங்கள் பிள்ளைகள் இப்படியா என்று எண்ணி எண்ணி பதைத்திருக்கும்.
இறக்கும் வரைக்கும் நினைத்திருக்கும்
எங்கள் தலைவரை எண்ணிப் பார்த்திருக்கும்
தன்மானத்தோடு
மடிந்திருக்கும்
தமிழீழ மண்ணை அணைத்திருக்கும்.
அச் சிறுத்தை அச்சம் காரணமாக கண்ணில் பட்டவர்களை தக்கியிருக்கலாம். அது அந்த விலங்கின் பண்பு. ஏனெனில் அது ஒரு ஊன் உண்ணி. அது அப்படித்தான் சிந்திக்கும். இது மனிதர் .இது மிருகம் என்று வேறுபாடு பார்த்து நடப்பதற்கு அதற்கு 6 ஆவது அறிவும் இல்லை. 6 அறிவு கொண்ட நாங்கள் தான் அதன் திசையை மாற்ற சிந்தித்திருக்க வேண்டும். மாறாக அதனது பாணியில் அதனை தாக்கியதை ஏற்கமுடியாமல் இருக்கிறது.
காணொளிகளை பார்க்கும் போது ஒரு சிறுத்தையை பலர் சுற்றி நின்று கையில் கிடைத்தவற்றால் தாக்கியிருக்குகிறீர்கள். 5 அறிவு கொண்ட சிறுத்தையிடம் இருக்கும் தாக்குதல் பண்புகூட 6 அறிவுகொண்ட உங்களிடம் இல்லை. உங்களின் தாக்குதலை எதிர்த்து உறுமிய சிறுத்தையை நான் மதிக்கிறேன்.
எதிரில் நிற்கும் விலங்கு எப்படிப்பட்டது என்பதையும் அதன் பின்னால் உள்ள தேசிய அடையாளத்தையும் உணர்ந்து நீங்கள் செயற்பட்டிருக்க வேண்டும். அங்கு வந்த அதிகாரிகளுக்கு அந்த விலங்கில் அக்கறை இருக்காமல் இருந்திருக்கலாம். அவர்களின் துறைக்கு அப்பாலும் அவ்விலங்கில் கரிசனை கொண்டிருக்க வேண்டியவர்கள் நீங்கள். ஏலவே ஏலாத கட்டத்தில் அதை தாக்கி பிடித்து பத்திரமாக அதன் காயங்களை ஆற்றி மீண்டும் காட்டில் சேர்த்திருக்கலாம். ஆனாலும் நீங்கள் சுற்றிவளைத்து அடித்து கொன்றதை நியாயப்படுத்தவே முடியாது.
உயிரோடு உள்ளவரை
புலியின் ஒரு முடியைக்கூட
தொட தைரியம் அற்றவர்கள்
ஏவ்வாறு அதன் அடி மடியில்
கை வத்தார்கள் என்ற சந்தேகத்திற்கு இன்று கிடைத்தது
ஒரு தீர்வு
உலகளவில் ஈழத்தமிர்கள் ஏற்படுத்திய தலைகுனிவு!கிளிநொச்சியில் ஈழத்தின் தேசிய விலங்கான சிறுத்தையை ஈவு இரக்கமின்றி,மிகவும் கீழ்தரமான முறையலில் துனபுறுத்தி கொன்றமை......நம் மக்களா இதை செய்தார்கள்!வேதனை!!
எத்தனை பேர் நின்றாலும் எதிர்த்து நின்று உயிர்விட்ட புலிக்கு வீர வணக்கம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.