இலங்கையின் மூத்த பத்திரிகையாளர், அரசியல் ஆய்வாளர் மற்றும் கட்டுரையாசிரியரான டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்.
இலங்கை அரசியல், இனப்பிரச்சினை மற்றும் பிராந்திய அரசியல் தொடர்பான இலங்கையில் ஒலித்த குரல்களில் ஒருவராக பரவலாகக் கருதப்பட்ட ஜெயராஜின் பத்திரிகை வாழ்க்கை பல தசாப்தங்களை கடந்தது.
பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதிய அவர், The Island, Daily Mirror மற்றும் Daily FT உள்ளிட்ட முக்கிய தேசிய ஊடகங்களில் தனது அரசியல் பகுப்பாய்வு கட்டுரைகளை வரைந்திருந்தார்.
இலங்கையில் பிறந்த ஜெயராஜ், தனது பத்திரிகைப் பயணத்தை தமிழ் நாளிதழான வீரகேசரியில் ஆரம்பித்தார். பின்னர் ஆங்கில ஊடக பத்திரிகைத்துறைக்கு மாறிய அவர், இடம்பெயர்ந்த பின்னர் வெளிநாட்டிலிருந்து தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார்.
தரைமட்ட தகவல் வலையமைப்பை விரிவாகப் பேணியிருந்த அவர், பல முக்கிய அரசியல் செய்திகளை முதன்முதலில் வெளிக்கொணர்ந்தார். மேலும் dbsjeyaraj.com என்ற தனது சொந்த சுயாதீன அரசியல் இணையதளத்தையும் நடத்தி வந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.